தீராத நோயை தீர்க்கும் பரிகாரம்.

suthipoduthal
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதற்கு இணங்க நாம் எவ்வளவுதான் சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் நோய்வாய் பட்டிருந்தால் அந்த சொத்துக்களால் எந்தவித பயணம் இல்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட நோய் தீவிரத்தில் இருந்து தீவிரத்தை குறைப்பதற்கு உதவக்கூடிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நோய்களின் தாக்கம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முறையான மருத்துவரை அணுகி அந்த காரணத்தை கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ளும் பொழுது அவர்களின் உடல்நலம் சீராகும். அதையும் மீறி எவ்வளவு தான் மருந்து எடுத்தாலும் உடல் நலம் சீராகாமல் மேலும் மேலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலையிலும், எதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவராலேயே கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையிலும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மதியம் 1 முதல் 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இயலாத பட்சத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்யலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் 2 முதல் 3 கைப்பிடி அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கருப்பு எள் பொடியை ஒரு சிறிய ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த எள் பொடிக்கு இரண்டு மடங்காக நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிணைந்து கொள்ளுங்கள்.

பிணைந்த மாவை தேய்த்து நல்லெண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றிலிருந்து மூன்று சப்பாத்தி வரை நாம் செய்யலாம். அதற்கு மேல் தேவை இல்லை. நோய்வாய்ப்பட்டவர்களை கிழக்கு முகமாக பார்த்து அமர வைத்து சப்பாத்தியை வைத்து எட்டு முறை வலதில் இருந்து இடது புறமாக சுற்ற வேண்டும். பிறகு இந்த சப்பாத்தியை வீட்டிற்கு அருகில் இருக்கும் எருமை மாட்டிற்கு உணவாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

வீடு திரும்பும் பொழுது குளித்துவிட்டு வீட்டிற்குள் வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்வதன் மூலம் எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து படிப்படியாக குறைந்து நலம் பெறுவார்கள். இந்த எளிமையான சப்பாத்தி தானத்தை எருமை மாட்டிற்கு தான் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் நல்லெண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பான முறையில் நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள  வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர உதவும் தீபம்.

நம்பிக்கை இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடியுங்கள்.

- Advertisement -