தெய்வத்தின் அருள் உங்கள் மீது பட்டு உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர இதை மட்டும் சரியாக செய்து வாருங்கள். பிரச்சனைகள் அனைத்தும் பறந்து போகும்

murugan
- Advertisement -

இந்த உலகில் ஜனனம் எடுத்த அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். மனிதர்களாக பிறப்பெடுத்த நாம் அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கடவுளை வணங்குகின்றோம். அவ்வாறு வணங்கும் போது, சிலருக்கு பிரச்சனைகள் தீர்ந்து விடும். சிலருக்கு பிரச்சனைகள் தீராது. அதற்கு காரணம் பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய வழிபாடை மேற்கொள்ளாததே ஆகும். நாம் இந்த பதிவில் எந்த பிரச்சனைகளுக்கு என்ன வழிபாட்டு முறைகளை அல்லது விரதங்களை மேற்கொண்டால் தெய்வத்தின் அருளோடு நமது பிரச்சனை தீரும் என்பதை பார்ப்போம்.

பொதுவாக ஒரு வழிபாட்டை மேற்கொள்கிறோம் என்றாலோ அல்லது விரதத்தை மேற்கொள்கிறோம் என்றாலோ இத்தனை வாரங்கள் இத்தனை நாட்கள் அல்லது இத்தனை மாதங்கள் நான் இதை கடைப்பிடிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். 9, 15, 27, 48, 108 போன்ற எண்ணிக்கைகளில் அவை அமைவது சிறப்புக்குரியது.

- Advertisement -

மேலும் வழிபாட்டை ஆரம்பிக்கும் நாள் வளர்பிறையாக இருக்க வேண்டும். அடுத்ததாக யார் அந்த வழிபாட்டை மேற்கொள்கிறாரோ அவருக்கு அந்த நாளில் சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. மேலும் அவருடைய ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஏழாம் இடங்களில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கவனித்து ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறையையோ அல்லது விரதத்தையோ மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சங்கடங்கள் அதிகமாக இருக்கிறது அல்லது தடைகள் அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் அவர்களின் சங்கடங்கள் நீங்கும். நமக்கு பல தோஷங்கள் ஏற்படும். அந்த தோஷங்களினால் பாதிப்புகளும் ஏற்படும். அவ்வாறு தோஷங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பிரதோஷ விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபடலாம்.

- Advertisement -

குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சஷ்டியில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிப்பிற்கேற்ற வேலை வேண்டும், பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிருத்திகை விரதம் இருந்து பெருகப்பெருமானை வழிபடலாம்.

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நபர்கள் தனக்கு வரப்போகும் துணை நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் பௌர்ணமியில் விரதம் இருந்து முழு நிலவை வழிபட வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது தான் அமாவாசை விரதம். அவ்வாறு அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால், நம் சந்ததியினருக்கு குறைவில்லாத வாழ்க்கை அமையும்.

- Advertisement -

குரு பகவான் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கலாம். பராசக்தி என்பவள் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூன்று பேரின் அம்சமாக கருதப்படுபவள். அந்த பராசக்தியின் அருளை பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.

முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருக்கலாம். சிவ பெருமான் மற்றும் விநாயகரின் அருளை பெறுவதற்கு திங்கட்கிழமை விரதம் இருக்கலாம். மகாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்கு புதன்கிழமை விரதம் இருக்கலாம். சூரிய பகவானின் அருளை பெறுவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: தெய்வத்தின் அருள் உங்கள் மீது பட்டு உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டுமா? இதை மட்டும் சரியாக செய்து வாருங்கள். பிரச்சனைகள் அனைத்தும் பறந்து போகும்

சனீஸ்வர பகவான், விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயரின் அருளை பெறுவதற்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். எந்த விரதமாக இருந்தாலும் சங்கல்பம் செய்து கொண்டு முழு மனதோடு வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

- Advertisement -