தெய்வ கடாட்சம் பெற தீப வழிபாடு

dheiva kadatcham
- Advertisement -

நாம் வாழும் வீடும் ஒருவித கோவில்தான். அந்த கோவிலில் தெய்வங்களின் அருள் பரிபூரணமாக இருந்தால்தான் அந்த வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தெய்வங்கள் இருப்பதை தவிர்த்து தீய சக்திகள் நிறைந்திருந்தால் அந்த வீட்டில் எந்தவித நன்மையும் நடக்காது. அப்படி இருக்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்கவும் தெய்வ அருளை பெறவும் உதவக்கூடிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலக வேண்டும் என்றால் அந்த வீட்டில் காலையில் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்ததே. அப்படி ஏற்றும் தீபத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தீபமாக நிம்ப தீபம் திகழ்கிறது. இந்த நிம்ப தீபத்தை நாம் நம் வீட்டில் ஏற்றி வழிபடும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும். தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். நம் இல்லமும் கோவிலாக மாறும். இந்த நிம்ப தீப வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை நாம் சனி, ஞாயிறு, திங்கள் இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமை ஏற்றி வழிபடலாம் அல்லது இந்த மூன்று கிழமையிலும் ஏற்றி வழிபடலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு வேப்ப எண்ணையும், இலுப்பை எண்ணெயும் தேவைப்படும். மூன்று வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலைகளின் நுனி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் சாணத்தை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த சாணத்தின் மேல் அகல்விளக்குகளை வைத்து அந்த அகல் விளக்கில் வேப்பெண்ணையும் இலுப்பெண்ணையும் சரி பாதியாக கலந்து ஊற்ற வேண்டும். பிறகு அதில் தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு இந்த தீபத்தை பார்த்து ஒரு மந்திரத்தை நாம் கூற வேண்டும். இந்த மந்திரத்தை நம்மால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை கூறலாம். ஒரு முறை மட்டும் கூட கூறிவிட்டு வழிபாடை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை நாம் செய்யும் பொழுது வீட்டில் செய்யப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹா மாரியச தேவியை ஹந ஹந ஹந தஹ தஹ பச பச மாம் ரஷ ரஷ மம சத்ரூன் திருஷ்டி சூன்ய மனோபய நாசய நாசய ஐஸ்வர்ய கடாட்ச வசி வசிய சீதளா தேவியை ஹீம் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை நாம் உச்சரித்தால் நம் வீட்டில் இருக்கக் கூடிய திருஷ்டி, பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, மனபயம் போன்ற அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் தெய்வ சக்தியும், மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு

நம் வீட்டில் எந்த அளவுக்கு தெய்வ சக்தி நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவுக்கு முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்தால் கண்டிப்பான முறையில் நம்முடைய இல்லமும் கோவிலாக மாறும்.

- Advertisement -