கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு

god2
- Advertisement -

இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் முதலில் நிற்பது இந்த கடன் பிரச்சனை. இது கலியுகம் அல்ல. கடன் உலகம். அந்த அளவுக்கு இன்று உலகம் முழுவதும் கடன் என்ற தொற்று, வியாதி போல பரவி வருகிறது. முன்பெல்லாம் இந்த கடன் என்ற வார்த்தையை கேட்டாலே பயப்படுவார்கள். வீட்டிற்கு கடன்காரன் வந்து நின்றால் அவமானம் என்று சொல்லுவார்கள்.

கடன் ஒரு கெட்ட வார்த்தை. ஆனால் இன்று ‘உங்களுக்கு கடன் வேண்டுமா, நாங்கள் தருகிறோம்’, என்று ஒரு நாளைக்கு நான்கில் இருந்து ஐந்து முறை ஒரு வங்கியில் இருந்து நமக்கு தொலைபேசி அழைப்பு வந்து விடுகிறது. இப்படி இருந்தால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது. நகையை அடமானம் வைப்பது பற்றி யோசித்தாலே தவறு என்று சொல்லுவார்கள். இப்போது எந்த இடத்தில் நகையை அடமானம் வைத்தால் அதிக லாபத்திற்கு பணம் கிடைக்கும் என்று கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள்.

- Advertisement -

சரி ஏதோ ஒரு சூழ்நிலையில் கைநீட்டி கடன் வாங்கி விட்டோம். வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி குட்டி போட்டு, தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. என்ன செய்வது. வேறு வழியே கிடையாது இறைவனின் பாதங்களைச் சரண் அடைவது தான் ஒரே வழி. அதிலும் பணத்துக்கு சொந்தக்காரியான மகாலட்சுமியின் பாதங்களை பிடிக்க வேண்டும். தினமும் அவளை வழிபாடு செய்ய வேண்டும்.

கடன் தீர மகாலட்சுமி வழிபாடு

தினமும் காலையில் எழுந்து சுத்தபார்த்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கவும். ஒரு சின்ன கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் அதில் இரண்டு மல்லிகைப்பூ, போடுங்க. தேனிலேயே மல்லிகை பூவே போட்டு விட வேண்டும். இதை மகாலட்சுமியின் முன்பாக வைத்து நிவேதினம் செய்து விடுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

மனம் உருகி பிரார்த்தனை வையுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் இந்த தேனில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் அரிசி மாவு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். உதிரி உதிரியாக கிடைக்கும் இந்த மாவை கொண்டு போய் ஏதாவது மரம் செடி கொடிகளுக்கு அடியில் தூவி விட்டு வரவும். தேன் கலந்த இந்த அரிசி மாவை எரும்புகள் சாப்பிடும் போது உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை குறையும்.

புதுசாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை தடுக்கும். நீங்கள் கடனாளியாகவே இருக்க வேண்டும் என்று உங்களுடைய தலையெழுத்து, உங்களுடைய கர்மாவானது இருந்தாலும் அது மறைவதற்கு இந்த பரிகாரம் நிச்சயம் ஒரு கை கொடுக்கும். மல்லிகை பூ சீசன் வரும்போது, மல்லிகை பூ கிடைக்கும் போது, தேனில் மல்லிகை பூவே கட்டாயம் போடுங்க. மல்லிகை பூ கிடைக்கவே இல்லை என்ற பட்சத்தில் அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் கசகசா பரிகாரம்

ஆனால் தேன் கட்டாயம் நமக்கு கிடைக்கும். கொஞ்சம் சுத்தமான தேனாக வாங்கி வழிபாட்டிற்கு பயன்படுத்திக்கோங்க. தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -