வீட்டை பாதுகாக்க நிலைவாசல் பரிகாரம்

vasal
- Advertisement -

ஒரு வீட்டில் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் வருவதற்கும், வீட்டில் இருப்பவர்கள் மனநிம்மதியை இழப்பதற்கும் காரணம் அந்த வீட்டில் தங்கி இருக்கும் துர் சக்திகள் தான். வீட்டில் இறை சக்தி இல்லாத சமயத்தில் துர்சக்திகள் வந்து தானாக குடியேறிக் கொள்ளும். பிறகு இறைசக்தியால் வீட்டிற்குள் நுழைய முடியாத சூழ்நிலை நிலவும். இதிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்வது.

யாகம் நடத்த முடியும் என்பவர்கள் வீட்டில் ஹோமம் செய்து வீட்டில் இருக்கும் துர் சக்தியை வெளியேற்றலாம். இறை சக்தியை வீட்டிற்கு அழைக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அந்த அளவுக்கு வசதி இருக்காது. செலவே இல்லாமல் வீட்டில் இறை சக்தியை நிலை நிறுத்த அந்த காலத்திலேயே சித்தர்கள் சொன்ன ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

துர் சக்தியை வெளியேற்றும் பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவையான பொருள். தர்ப்பைப்புல், பச்சை கற்பூரம். தர்ப்பை புல்லில் சிவன் விஷ்ணு பிரம்மா முப்பெரும் தேவர்களும் குடியிருப்பதாக ஐதீகம். பெரிய பெரிய யாகங்கள் நடத்தும் போதெல்லாம், இந்த தர்பை புல்லுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

யாகங்களை தடுப்பதற்கு ஏதேனும் துர்சக்திகள் சதி செய்தால் அந்த சதியை முறியடிக்கும் வேலையை இந்த தர்ப்பை புல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் கற்பூரத்திற்கு இயற்கையாகவே இறை சக்தியை வசியம் செய்யும் தன்மை உண்டு. அந்த வாசத்திற்கு கெட்டது பக்கத்தில் கூட வராது.

- Advertisement -

ஒரு கட்டு தர்ப்பை புல் வாங்கிக்கோங்க. அந்த தர்ப்பை புல்லுக்கு நடுவே ஒரு பச்சை கற்பூரத்தை சொருகி வையுங்கள். ஒரு நூல் போட்டு கூட நீங்களே அந்த பச்சை கற்பூரத்தை இந்த தர்பை புலுடன் கட்டி கீழே விழாமல் நிற்க வைத்து கொள்ளலாம். இந்த கட்டை நிலை வாசலுக்கு வெளிப்பக்கமாக ஒரு ஆணியில் மாட்டி தொங்கவிட வேண்டும்.

தர்பைப் புல்லானது காய்ந்து போனாலும் அதற்கு இருக்கும் மகிமை அப்படியே தான் இருக்கும். ஆகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பழைய தர்பை கட்டை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு புதுசை வைத்தால் போதும். இந்த தர்பை புல் கட்டு உங்கள் நிலை வாசலுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

- Advertisement -

இந்த தர்ப்பைப் புல்லானது உங்கள் வீட்டில் இருக்கும் துர்சக்திகளை வெளியேற்றி விடும். வெளியில் இருக்கும் இறை சக்தியை வீட்டிற்குள் அழைத்து நிரந்தரமாக தங்க வைத்து விடும். உங்கள் வீட்டிற்குள் காத்து கருப்பு போன்ற எந்த கெட்ட சக்தியும் அண்டாது. கண் திருஷ்டியோடு வீட்டிற்குள் வருபவர்கள், உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்கள் நிலை வாசலை தாண்டி வீட்டிற்குள் வரும்போது அந்த கெட்டதை எல்லாம் தர்ப்பை புல் அகற்றிவிடும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

அமாவாசை அன்று மாலை குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து, தர்பை புல்லை பூஜையறையில், குலதெய்வ திரு உருவப்படத்தின் முன்பாக வைத்து வேண்டிக்கொண்டு, அந்த தர்ப்பை புல்லை கொண்டு போய் குலதெய்வத்தின் பெயரை மனதில் சொல்லிக் கொண்டே நிலை வாசலில் கட்டி பரிகாரத்தை சிறப்பாக செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்யக் கூடாதவை

தினமும் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தை கொண்டு வந்து இந்த தர்பை புல்லுக்கு காட்டினாலே போதும். நல்லதே நடக்கும். குறைந்த செலவில் இந்த பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் பெறவும்.

- Advertisement -