நீங்கள் கூப்பிடாமலேயே தெய்வங்கள் உங்கள் வீட்டுக்குள் வருவதற்கு ஆசைப்படும். வெள்ளிக்கிழமை கற்பூரத்தை இப்படி ஏற்றினால்.

sudam
- Advertisement -

இறைவனை நீங்கள் கூப்பிட வில்லை என்றாலும், இறைவனே விரும்பி உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுக்கு தேவையான நன்மைகளை செய்ய இந்த ஒரு பரிகாரம் போதும். இந்த பரிகாரத்தை செய்தால் இறைவனுக்கு ரொம்பவும் பிடித்தவங்க வரிசையில் உங்கள் வீடும் அடங்கும். வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் பூஜை செய்வீர்கள் அல்லவா. அதோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். எப்போதும் போல வெள்ளிக்கிழமை என்றால் வீடு சுத்தமாக இருக்கும். பூஜை அறையில் இருக்கும் படங்களுக்கு புதியதாக பூக்களை வாங்கி போட்டு இருப்பீர்கள். உங்கள் வீட்டில் எப்போதும் போல ஏற்றக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து விடுங்கள்.

ஒரு சிறிய தாம்பூலத் தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் புதியதாக உடைத்த தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட தேங்காய் தண்ணீரை கொஞ்சமாக ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சமாக சிவப்பு நிற குங்குமத்தை போட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு ஆரத்தி போல ஒரு சிவப்பு நிற கலவை தயாராக கிடைத்திருக்கும்.

- Advertisement -

இந்த சிவப்பு நிற தண்ணீரின் மேல் ஒரே ஒரு வெற்றிலையை வைத்து, அதன் மேல் பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி இந்த சூடத்திற்கு முன்பு நீங்கள் அமர்ந்து உங்கள் குல தெய்வத்தையும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டால் தெய்வங்கள் மனம் விரும்பி உங்கள் வீட்டிற்குள் வரும்.

வெற்றிலையும் தேங்காய் தண்ணீரும் குங்குமமும் பச்சை கற்பூரமும் சேர்ந்து எரிகின்ற அந்த வாசம், அந்தப் புகை உங்கள் வீடு முழுவதும் பரவும் போது வீட்டில் இருக்கும் அத்தனை துஷ்ட சக்திகளும், துஷ்ட தேவதைகளும் வீட்டைவிட்டு வெளியேற தொடங்கிவிடும். பின்பு வீட்டிற்குள் நல்ல சக்தி நுழைய எந்த தடையும் இருக்காது.

- Advertisement -

கற்பூரம் எரிந்து முடியும் வரை நீங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து மனதார குலதெய்வத்திடம் உங்களுடைய கஷ்டங்களை சொல்லி பிரார்த்தனை செய்யலாம். உங்கள் வீட்டிற்குள் வர முடியாமல் கட்டுண்டு கிடக்கும் தெய்வங்களும், அந்த கட்டை எல்லாம் தகர்த்துக் கொண்டு வீட்டிற்குள் நிச்சயம் வரும் என்பது நம்பிக்கை.

கற்பூரம் முழுவதுமாக எரிந்து முடிந்த பின்பு சிறிது நேரம் இந்த தட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து இந்த ஆரத்தியை கொண்டு போய் வீட்டு வாசலில் கால் படாத இடத்தில் ஓரமாக கொட்டி விடுங்கள். வெற்றிலையை கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். பூஜை நிறைவடைந்துவிட்டது.

ஒரே ஒரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். நிச்சயமாக உங்கள் வீட்டில் நீங்களே எதிர்பார்க்காத பல நல்ல மாற்றங்கள் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -