மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்ய செம்பருத்தி பூ பரிகாரம்

mahalakshmi sembaruthi
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படையான காரணம் என்று பார்த்தால் முதலில் அது பணமாகத் தான் இருக்கும். அது மட்டும் இன்றி வேறு எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் அனைத்திற்கும் சரணடைய கூடிய ஒரே தெய்வமாக விளங்குபவர் அன்னை மகாலட்சுமி தாயார்.

மகாலட்சுமி தாயார் பணத்திற்கு தானே அதிபதி என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இவர் அஷ்டலட்சுமிகளின் சொரூபமாக காட்சி தருபவர். நம்முடைய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு வரை வணங்குவதற்கு பதிலாக மகாலட்சுமி தாயார் ஒருவரை நம் வசப்படுத்தி விட்டால் போதும். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

- Advertisement -

அதற்கு தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் புரிய வேண்டும். அப்படி தாயார் நம் வீட்டில் வந்து தங்குவதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முக்கியமான தேவை எனில் அது செம்பருத்தி பூ தான். அடுத்தது செம்பு அல்லது வெள்ளி பித்தளைகளான ஒரு சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண கற்பூரம் இவை மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு தேவை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை மாலை வேளையில் செய்ய வேண்டும். இந்த சொம்பை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி இந்த கற்பூரத்தை நன்றாக தூள் செய்து அதில் போட்டு விட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சளையும் சேர்த்த பிறகு செம்பருத்தி பூவை அதில் வைக்க வேண்டும்.

இந்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து தாயாரின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு இந்த சொம்பை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் அது சரியாக வேண்டும் என்று தாயாரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு பிறகு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

மீதம் இருக்கும் தண்ணீரை மறுநாள் காலையில் கால் படாத இடத்தில் ஊற்று வையுங்கள். அன்னையிடம் வைத்து வழிபட்ட இந்த தண்ணீரை 6 மணிக்கு மேல் வெளியில் ஊற்றக் கூடாது. ஆகையால் தான் மறுநாள் ஊற்ற வேண்டும். இதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நம்முடைய சகல விதமான பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக சஷ்டி திதியில் செய்ய வேண்டிய வழிபாடு

தாயாரின் அனுகிரகம் மட்டும் நமக்கு முழுவதுமாக கிடைத்து விட்டால் போதும் தனம் தானியம் செல்வம் தைரியம் என அனைத்தும் ஒரு சேர கிடைத்து நம்முடைய வாழ்க்கை சிறப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. தாயாரின் அனுகிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -