தோல்விக்கு தோனியே காரணம். மறைமுகமாக சாடும் – பும்ரா மற்றும் கோலி

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியே காரணம் என்று சில ரசிகர்கள் கூறினாலும் பும்ரா, கோலி ஆகியோர் மறைமுகமாக தோனியை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில், பும்ரா பேசும்போது இன்னும் பத்து முதல் 15 ரன்கள் வரை அடித்திருந்தால் இந்தியாவெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார். தோனி கடைசி நேரத்தில் அதிக சிங்கிள் ஓடுவதை தவிர்த்தார்.

Bumrah

மேலும், இதுகுறித்து கோலி பேசுகையில் இந்திய அணிக்கு 15 ஓவர்கள் வரை ஆட்டம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதன் பிறகு இந்திய அணியின் ரன் உயரவில்லை என்று தெரிவித்தார். 15 ஓவர்களுக்கு மேல் தோனி ஒருவர் மட்டுமே களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அவரைப்பற்றி பேசியது போதும். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் என்ன செய்து இருக்கவேண்டும் – பும்ரா கருத்து

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -