உங்கள் கைக்கு வர வேண்டிய பணம், எந்த தோஷமும் இல்லாமல் உங்கள் வீடு தேடி வரும். புதன்கிழமை இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும்.

panam
- Advertisement -

கடன் பட்டார் உள்ளம் கலங்குவது போய், கடன் கொடுத்தவருடைய உள்ளம் கொதித்து கிடக்கின்றது. காலம் மாறிவிட்டது. கைநீட்டி கடனை வாங்கியவன் சந்தோஷமாக இருக்கின்றான். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக கடனை கொடுத்தவன் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை. இது ஒரு பக்கம் இருக்க, கடன் வாங்கும் போது சந்தோஷத்தோடு வாங்குபவன், கடனை திருப்பிக் கொடுக்கும் போது நம்மை சபித்துக் கொண்டே திருப்பி கொடுக்கின்றான். நாம் கடனாக கொடுத்த பணம், நமக்கு தோஷம் நிறைந்த பணமாக திருப்பி வருகின்றது. கடனாக அடுத்தவர் கைக்கு சென்று, அவர்களுடைய கோபத்தாலும் கஷ்டத்தோடும், திருப்பி வரக்கூடிய அந்த பணதால் நமக்கு பிரயோஜனம் கிடையாது.

இப்படி ஒரு சிக்கலில் நீங்களும் சிக்கி இருந்தால், உங்களுடைய பணத்தை வேறு யாருக்காவது கடனாக கொடுத்து விட்டு, அதை திருப்பி வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால், அந்த பணத்தை தோஷம் இல்லாமல் உங்கள் வீட்டிற்குள் வர வைக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகார முறை.

- Advertisement -

புதன்கிழமை மஹாலட்சுமி வீட்டிற்குள் வருகை தரக் கூடிய நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள் அல்லவா. இந்த வரிகளுக்கு இணங்க நீங்கள் இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று காலை நேரத்தில் செய்யவேண்டும். இன்று புதன்கிழமை. இருப்பினும் இந்த பரிகாரத்தை இன்றைய தினம் செய்ய முடியாது. அடுத்த வாரம் புதன் கிழமையிலிருந்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும்போது, வாராக்கடன் சீக்கிரமே வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று இரவு ஒரு சிறிய சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு கரைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை புதன்கிழமை அந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து இந்த சிறிய சொம்பு தண்ணீரை, நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து விடுங்கள். அதன் பின்பு கல் உப்பு மஞ்சள் சேர்த்து தண்ணீரை வாசலில் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக புதன்கிழமை காலை 5 மணிக்கு இந்த தண்ணீரை உங்கள் வாசலில் தெளித்து கோலம் இட வேண்டும். இந்த தண்ணீரை வாசலில் தெளிக்கும்போது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக்கொண்டு ‘என்னுடைய வீட்டில் வசித்த மகாலட்சுமி, சூழ்நிலை காரணமாக என் வீட்டிலிருந்து வேறு ஒருவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அந்த பணம், அதாவது அந்த மகாலட்சுமி மீண்டும் எந்த தோஷமும் இல்லாமல் என் வீட்டிற்குள்ளே வரவேண்டும்’. என்ற சங்கல்பத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த தண்ணீரை வாசலில் தெளித்து விடுங்கள்.

உங்களுக்கு வரவேண்டிய பணம் ஒரு சில நாட்களில் உங்கள் கை வந்து சேரும். இந்த பரிகாரத்தை கடன் தொகை வசூல் ஆகும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும். வாரம் தோறும் வரும் புதன்கிழமை மட்டும் இந்த கல் உப்பு கலந்த தண்ணீரை வாசலில் தெளித்தால் போதும். இப்படி செய்யும்போது உங்கள் வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி தோஷம் இல்லாமல் வீட்டிற்குள் வருவாள்.

சில பேரிடம் பணத்தை கடனாகப் கொடுத்திருப்போம். அந்த பணத்தை அவர்கள் நமக்கு திருப்பியும் கொடுத்து இருப்பார்கள். ஆனால் அந்த பணம் நம் கைக்கு வந்ததும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீண் விரயமாகும். காரணம் அவர்கள் நமக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும்போது நம்மை திட்டிக்கொண்டே சாதத்துடன் திருப்பி கொடுப்பது தான். இப்படிப்பட்ட தோஷம் நிறைந்த பணத்தை நல்ல பணமாகமாற்றக் கூடிய சக்தியும் இந்த பரிகாரத்திற்கு உண்டு. பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -