பழனி முருகன் சிலை கொடிய விஷக்கலவையால் செய்யப்பட்டதா ?

palani-temple
- Advertisement -

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அறிந்ததே. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை இங்கு யார் செய்தார்? அந்த சிலை விஷக்கலவையால் செய்யப்பட்டதா? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

lord murugan

நவபாஷாணங்கள் எனப்படும் ஒன்பது வகை பாஷாணங்களை கட்டி இப்படி ஒரு அற்புத சிலையை அங்கு உருவாக்கினார் போகர் என்னும் சித்தர்.

- Advertisement -

வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள்.

இவைதான் பிரதானம், இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.

- Advertisement -

lord muruga

போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது.

இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரசகற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை.

அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
ஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா?

இந்த இந்த பாஷாணங்களை இந்த இந்த முறையில் கட்டினால் அவைகளின் விஷத்தன்மை முறிந்து மக்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மூலிகையாக மாறும் என்ற பாடத்தை அறிந்து அதன் படி இப்படி ஒரு சிலையை செய்து அதை மக்களுக்காக அர்ப்பணித்த போகர் சித்தரை நாம் கோடி முறை வணங்கினாலும் போதாது.

ஆன்மீக குறிப்புகள், மந்திரங்கள், ஆன்மீக கதைகள் என் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -