டி20 போட்டிகளில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திகை இதனால் தான் ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை – உண்மையை சொன்ன சஞ்சய் மஞ்சுரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

dhoni karthick

இந்த தொடரின் டி20 போட்டிகளில் இடம்பிடித்துள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ஒருநாள் அணியில் விளையாடுகிறார். இதுகுறித்து தற்போது சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் பண்டிற்கு போதிய வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு பக்கம் கார்த்திகை நீக்கி இருந்தாலும், என் மனநிலை அடிப்படையில் தினேஷ் கார்த்திகை இந்திய தேர்வுக்குழு ஒரு டி20 பேட்ஸ்மேனாகவே பார்க்கிறது என்று நான் கருதுகிறேன்.

Pant

மேலும், சமீபமாக டி20 தொடரில் பினிஷர் ரோலில் இறங்கி ஆட்டத்தை முடித்து தரும் கார்த்திக் அதற்கு மட்டுமே ஏற்றவாறு விளையாடுகிறார் என்று தேர்வுக்குழு கருதி இருக்கலாம். இருப்பினும், உலகக்கோப்பை இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார் .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -