பணம் உங்களைத் தேடி வரும். நாளை அமாவாசை அன்று உள்ளங்கையில் இந்த ஒரு பொருளை வைத்து தேவையான பணத்தை கேட்டுத்தான் பாருங்களேன்.

amavasai
- Advertisement -

தீபாவளிக்கு மறுநாள் இந்த அமாவாசை தினம் வருகின்றது. அதிலும் சூரிய கிரகணம் வரவருக்கின்ற ஒரு அரிய நாள் இது. இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லா நேரங்களிலும் நாம் வைக்கக் கூடிய வேண்டுதல் அவ்வளவு எளிதில் பலித்து விடும் என்று சொல்லி விட முடியாது. ஆனால் ஒரு சில நாட்களில் ஒரு சில நேரங்களில் நேரம் காலம் அமிர்தயோகமாக இருக்கும். அந்த சமயத்தில் சில வேண்டுதலை வைக்கும் போது அந்த வேண்டுதல் உடனடியாக பலிக்கும். அப்படிப்பட்ட ஒரு நாள்தான் நாளை வரவிருக்கும் அமாவாசை தினம். அந்த நாளை நாம் எப்படி பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது. வேண்டிய வரங்கள் கிடைக்க எப்படிப்பட்ட பரிகாரத்தினை செய்யலாம் என்பதை பற்றிய சின்ன குறிப்பை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளை அமாவாசை நாள். அதாவது அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியிலிருந்து 5:45 குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். காலையில் எழுந்து சுத்தபத்தமாக முதலில் குளித்து விட வேண்டும்.

- Advertisement -

சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கட்டாயமாக ஒரு துளசி இலை, 1 ரூபாய் நாணயம், 3 ஏலக்காய் தேவை. இந்த 3 பொருட்களையும் முந்தைய நாள் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் சுவாமியை பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கையில் துளசி இலையையும் ஒரு ரூபாயையும் ஏலக்காயையும் வைத்துக் கொள்ளுங்கள். வலது உள்ளங்கையில். பின்பு கண்களை மூடி அமைதியாக இருக்கக்கூடிய அந்த காலை பொழுதில் இந்த பிரபஞ்சத்திடம் உங்களுடைய தேவைகளை சொல்லுங்கள். நிறைய பேருக்கு கடன் பிரச்சனை இருக்கும். நிறைய பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். சில பேருக்கு மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.

- Advertisement -

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் உங்கள் குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தியான நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி இந்த நேரத்தில் நீங்கள் எந்த வரத்தை கேட்டாலும் அதனை உடனே பெற்று விடலாம்.

காலை நான்கு மணியிலிருந்து 5:45 மணிக்குள் இருக்கக்கூடிய இடைப்பட்ட காலத்தில் 15-ல் இருந்து 20 நிமிடங்கள் இந்த தியானத்தை நீங்கள் மேற்கொண்டால் போதும். ஆனால் 6:00 மணிக்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

கையில் இருக்கும் துளசி இலையை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். வாடிய பின்பு கால்படாத இடத்தில் போட்டு விடலாம். இந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஏலக்காயையும் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். நேர்மறை ஆற்றல் நிறைந்தது இந்த நாணயம். இந்த நாணயத்தை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும். இதை மட்டும் செய்து விட்டால் நல்லது நடந்துவிடுமா? பணம் வந்துவிடுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. உங்களுடைய அயராத உழைப்பிற்கு தகுந்த பலன் கொடுக்க இந்த பரிகாரமும் துணை நிற்கும். பரிகாரத்தை செய்தவர்கள் சும்மாவே இருக்கும் போது எதுவுமே நடக்காது என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -