உங்க வீட்டில் மாமரம் இப்படி இருந்தால் கஷ்டம் தான் வரும் தெரியுமா? மாமரம் வீட்டில் இருக்கக் கூடாத இடம் என்ன?

mango-tree-mamaram
- Advertisement -

எளிதாக வளர்க்கக் கூடிய மரங்களில் மா மரமும் ஒன்று! பெரும்பாலான இல்லங்களில் இன்று மாமரத்தை காண முடிகிறது. அந்த அளவிற்கு மாமரம் என்பது எல்லோருடைய வீட்டிலும் ஒரு செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வருகிறது. இந்த மாமரம் எந்த இடத்தில் இருந்தால் குடும்பத்தில் கஷ்டங்களும், வறுமையும் தாண்டவம் ஆடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது? என்பதை தான் இந்த வாஸ்து சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மாமரம் நன்கு படர்ந்து விரிந்து வளரக்கூடியது. வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளும், துஷ்ட சக்திகளும் அழிய மாவிலைகளை வீட்டில் தோரணமாக கட்டுவது அந்த கால வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் மாமரம் இருக்கும் இல்லங்களில் மாவிலை தோரணம் புதிதாக கட்டி வந்தால் அந்த வீட்டில் சுபீட்சம் அதிகரிக்கும். மாவிலைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து, அதை வீட்டின் பிரதான தலைவாசலில் கட்டி தொங்க விட வேண்டும். ஒவ்வொரு இலைக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்யும் பொழுது அதற்கும் தூபத்தை காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

இது போல செய்து வந்தால் வீட்டில் இருக்கும் கஷ்டம் மறைந்து மகாலட்சுமியின் பாதம் பதியும் என்பது நம்பிக்கை. இத்தகைய மகத்துவம் வாய்ந்த மா இலைகள் கிடைக்கக் கூடிய இந்த மாமரத்தை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய மாமரம் வீட்டில் இருந்தாலும் அது நாம் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பார்க்கும்படி அமைந்திருக்கக் கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.

எழுந்ததும் மாமரத்தை பார்க்க நேர்ந்தால் அது நல்லதல்ல என்று கூறுகிறது. வாஸ்துபடி மாமரம் வீட்டின் பக்கவாட்டில் அல்லது பின்புறத்தில் அமைந்திருக்க வேண்டும். இதுதான் சரியான இடமாக இருக்கும் என்று கூறுகிறது. மாமரம் ஒரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு போதிய இடம் தேவை. புதிதாக வீடு கட்டுபவர்கள் நிலம் வாங்கியவுடன் அதில் ஒரு மா மரத்தை நட்டு வளர்த்தால் அந்த வீட்டை தடை இல்லாமல் எளிதாக கட்டி முடித்து விடலாம் என்கிற நம்பிக்கையும் உண்டு, ஆனால் அந்த வீடு வாஸ்துபடி அமைந்து வீட்டின் பக்கவாட்டில் அல்லது பின்புறத்தில் மரத்தை வைப்பது தான் நல்லது.

- Advertisement -

மாடியில் நீங்கள் கருவேப்பிலை செடியை வைத்து வளர்த்து வந்தாலும் நல்ல வாஸ்துபடி அதிர்ஷ்டம் வருமாம், ஆனால் கருவேப்பிலை செடி ஒற்றை ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் இல்லத்தில் வளர்க்கக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் அல்லது ஆண் குழந்தையோடு பெண் குழந்தைகளும் சேர்ந்து இருக்கும் பொழுது நீங்கள் கருவேப்பிலை செடியை மாடியில் வைத்து வளர்க்கலாம். கறிவேப்பிலை செடியும் வீட்டிற்கு முன்னர் வைத்து வளர்க்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
மணி பிளான்ட்க்கு அடுத்து இந்த செடிதான் வாஸ்து ரீதியாக பணம் தருமாம் தெரியுமா? செல்வம் பெருக்கெடுக்க கஷ்டம் நீங்க இந்த செடியை இந்த நாளில் வைத்து வளர்த்து பாருங்கள்!

வீட்டிற்கு முன்புறம் துளசி மாடம் அல்லது கற்றாழை செடி, நெல்லி மரம், மாதுளை, மல்லி, ரோஜா போன்றவற்றை வைத்து வளர்க்கலாம். காலையில் எழுந்ததும் இத்தகைய செடிகளை பார்க்கும் பொழுது நமக்கு அந்த நாள் முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். வெற்றி மேல் வெற்றி குவியும் என்பது நம்பிக்கை ஆனால் மாமரம் அல்லது கருவேப்பிலை மரம், முச்சடிகள், ஒற்றை வெற்றிலை கொடி, செவ்வரளி, பொன்னரளி, முருங்கை மரம் போன்றவற்றை வைத்து வளர்க்க கூடாது.

- Advertisement -