துர்கா ஸ்டாலின் வீட்டுப் பூஜை அறையில் இருக்கும் முருகனின் வேல் எங்கிருந்து கொடுக்கப்பட்டது?

durga-stalin
- Advertisement -

சமீபமாக ஒரு யூடியூப் சேனலில், துர்கா ஸ்டாலின் அவர்கள் வீட்டு பூஜை அறையை பற்றியும், அவர்கள் பூஜை செய்யும் முறையைப் பற்றியும், பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்கள் பற்றியும் ஒரு வீடியோ காட்சி வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் பிரத்தியேகமாக துர்கா ஸ்டாலின் அவர்கள் தன் வீட்டில் ஒரு வேலை வைத்து வழிபாடு செய்வதாக சொல்லியுள்ளார்கள். குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வேலில் அப்படி என்ன சிறப்பு உள்ளது. அந்த வேல் எந்த இடத்தில் எப்போது கொடுக்கப்பட்டது. அந்த வேலின் மதிப்பு என்ன என்பதை பற்றிய சில தகவல்களைத் தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

durga-stalin1

சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில், திருத்தணியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. திருத்தணி அருகே இருக்கும் அம்மையார்குப்பம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் நடந்த, மக்கள் கிராம சபை கூட்டத்தில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற சமயத்தில் அங்கு உள்ள வேத பண்டிதர்கள் இந்த வெள்ளி வேலை திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்கள்.

- Advertisement -

அந்த வேல்தான் இப்போது முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துள்ளார்கள். இந்த வேலை பற்றி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களே அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வேல் திருத்தணி முருகப் பெருமானிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட வெள்ளி வேல் என்பதும், இதனுடைய மதிப்பு 3 லட்சத்தை தாண்டும் என்பதையும் இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

vel

இதோடு மட்டுமல்லாமல் தேர்தல் சமயத்தில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாராஹி அம்மன் திரு உருவப்படமும் பரிசாக வந்துள்ளது. அந்த வாராகி அம்மன் திரு உருவப்படமும் தற்போது முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வீட்டுப் பூஜை அறையில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அதாவது போருக்குச் செல்வதற்கு முன்பு அந்த காலத்தில் மன்னர்கள் வாராஹி அம்மனை வழிபாடு செய்து விட்டு செல்வார்களாம். மன்னர்களுக்கு கிடைக்கும் வெற்றியை போல், முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று அந்த படம் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே யாரோ ஒருவரால், பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

Varahi amman

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வெற்றியை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான் இந்த வேலும், வாராகி அம்மனின் திரு உருவப்படமும் நம்முடைய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிசாக கிடைத்ததோ என்னமோ? அது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆனால், திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பாசத்துடன் கொடுத்த பொருட்களை எல்லாம் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் தன் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள் என்பதை  Nayaki TV யூடியூப் சேனலில், திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பேட்டியின் வாயிலாக நம்மால் தெரிந்துகொள்ள முடிகின்றது.

- Advertisement -