தீராத நோய் தீர சொல்ல வேண்டிய மந்திரம்

hanuman
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்ததின் அர்த்தம் இந்த கலியுகத்தில் தான் தெரிகிறது. மூன்று வேலை சாப்பாடு சாப்பிடுகின்றோமோ இல்லையோ, மறக்காமல் மருந்து மாத்திரை சாப்பிடுகின்றோம். இந்த மருந்து சாப்பிடவில்லை என்றால் சுகர் கண்ட்ரோலில் இருக்காது.

இந்த மருந்து சாப்பிடவில்லை என்றால் தைராய்டு கண்ட்ரோல் இருக்காது. இந்த மருந்து சாப்பிடவில்லை என்றால் பிபி கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடும். இப்படி  சிறுவயதிலிருந்தே மருந்து மாத்திரையை கையில் வைத்துக் கொண்டு திரிகின்றோம். இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கான ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதல் வழிபாடாக சூரியனை நினைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சூரியன் உதயம் ஆகும்போது வெளியில் நின்று, அதாவது வெட்ட வெளியான இடத்தில் நின்று, அந்த கதிர்கள் நம் மீது விழும்படி இந்த சூரிய நமஸ்காரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

அதன் பிறகு பூஜை அறைக்கு வந்து கிழக்கு பார்த்தவாறு ஒரு விளக்கு, அதுவும் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய பகவானை வணங்கி உங்க தீராத நோய் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். வாரம் தோறும் தொடர்ந்து 48 வாரம் இதை செய்யணும். உங்களுடைய பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லை, கணவருக்கு உடல்நிலை சரியில்லை, என்றாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் இதை பின்பற்றலாம் பலன் கிடைக்கும்.

- Advertisement -

இதே போல அனுமனை நினைத்து சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தையும் நாம் தெரிந்து கொள்வோம். இதை நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம் என்று சொல்லுவார்கள். தினமும் மருந்து மாத்திரை சாப்பிடுறீங்களா. காலையில தொடர்ந்து தினமும் மாத்திரை போட்டு இருக்கீங்க. அந்த சமயம், அந்த மாத்திரையை போடுவதற்கு முன்பு அனுமனை ஒரு முறை நினைச்சுக்கோங்க.

பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை ஒரு முறை படிச்சுக்கோங்க. சீக்கிரம் இந்த தீராத நோய் தீர வேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடாத நிலைமை எனக்கு வர வேண்டும் என்று மனம் உருகி, உண்மையாக நம்பிக்கையுடன் பிரார்த்தனை வைத்து இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு பிறகு மாத்திரையை சாப்பிடவும். மாத்திரை சாப்பிடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்

ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ
ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ

நீங்க மருந்து மாத்திரை சாப்பிடும்போது இந்த மந்திரத்தை சொல்ல 1 முறை சொல்ல முடியவில்லை என்றால் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லலாம். இரவு தூங்கச் செல்லும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம். 27 முறை சொல்லுங்க. 11 முறை சொல்லுங்க. கணக்கு என்பது உங்களுடைய நேரத்தை பொறுத்து.

இதையும் படிக்கலாமே: மகா சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு தீர்க்க ஆயுசு இருக்கும். நோயற்ற வாழ்வு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்று நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -