அட்டை கருப்பாக இருக்கும் சருமத்தை கூட ஐந்து நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற, சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருள் போதும்.

face
- Advertisement -

சில பேர் பார்ப்பதற்கு மாநிறமாக இருப்பார்கள். சில பேர் மாநிறத்திற்கும் குறைவான கலரை பெற்று இருப்பார்கள். அது அவரவருக்கு இருக்கும் இயற்கையான சருமம். அதை குறை சொல்ல வரவில்லை. எல்லா நிறமும் அழகுதான். எல்லா அழகும் பேரழகு தான். இருப்பினும் சில பேருக்கு, இருக்கக்கூடிய நிறத்தில் இருந்து, இன்னும் கொஞ்சம் கூடுதலான நிறம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா. குறிப்பாக பெண்கள் திருமணத்தின் போது அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

காலேஜ் போகும் பெண்கள் வெள்ளையாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு எளிமையான குறிப்பு இது. ஒரு குளியல் பொடி தயார் செய்யும் முறை. இந்த குளியல் பொடியை பயன்படுத்தி குளித்தால் தொடர்ந்து 7 நாட்களில் உங்களுடைய நிறம் கூடுதல் நிறத்தை பெறும்.

- Advertisement -

எளிமையான குளியல் பொடி தயாரிக்கும் முறை:
பச்சரிசி 1 கப், உளுந்தம் பருப்பு 1/4 கப், மைசூர் பருப்பு 1/4 கப், இந்த மூன்று பொருட்கள் போதும். (ரேஷன் பச்சரிசியை கூட பயன்படுத்தலாம். நன்றாக கழுவி காய வைத்து விட்டு பயன்படுத்துங்கள்.) நாம் வீட்டில் சமையலறையில் இருக்கும் 3 பொருட்கள் தான். ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக போட்டு எவ்வளவு அரைக்க முடியுமோ, அவ்வளவு நைசாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பச்சரிசியை போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உளுந்து போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மைசூர் பருப்பு போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சலித்த இந்த பொடி கொரகொரப்பாக இருக்கக் கூடாது. நைசான பொடி தான் தேவை. நறநறப்பாக இருக்கும் குளியல் பொடியை பயன்படுத்தினால் சருமத்தில் டேமேஜ் ஏற்படும். இந்த குளியல் பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் போதும். 6 மாதங்கள் கெட்டுப் போகாது. இந்த குளியல் பொடியை பயன்படுத்துவதிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. முகத்தில் இருக்கும் பிக்மென்ட்டேஷனை கருப்பு நிறத்தை போக்குவதற்கு தேவையான பொருள் என்றால் அது உருளைக்கிழங்கு சாறு. அதில் இருக்கும் ஸ்டார் சத்து சருமத்திற்கு ரொம்ப ரொம்ப நன்மை தரக்கூடியது.

ஒரு உருளைக்கிழங்கை நன்றாக துருவி கையாலே பிழிந்து எடுத்தால் சாறு கிடைக்கும். தண்ணீர் ஊற்றி சாறு எடுக்கக் கூடாது. வெறும் உருளைக்கிழங்கை துருவி புழியும்போது சாறு கிடைக்கும் அல்லவா. அந்த சாறை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது இந்த சாறை எடுத்தால் போதும். ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு குளியல் பொடி போட்டு இந்த உருளைக்கிழங்கு சாறை ஊற்றி கலந்து முகம் கை கால்களில் நன்றாக தேய்த்து, ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: ஒரு கைப்பிடி பாசுமதி அரிசி இருந்தால் போதும். உங்களுடைய சருமம் மேக்கப் எதுவும் போடாமலேயே இப்படி கொரியன் ஸ்கின் போல பளபளப்பாக ஜம்முனு மாறிவிடும்.

அதன் பிறகு லேசாக ஜென்டில் ஆக மசாஜ் செய்து குளித்து விட்டால் ஒரு முறையிலேயே நல்ல கலர் கிடைக்கும். இப்படியே தொடர்ந்து குளித்து வாருங்கள். 7 நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும். தினந்தோறும் இப்படி குளித்து வர உங்களுடைய மாநிறமும் சரி, கருப்பு நிறமும் சரி, நல்ல கலரான நிறமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இது கூடவே சேர்த்து இன்னும் சில குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், மாதுளை ஜூஸ், இப்படி பழ சாறு குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் காய்கறிகள் பழங்களை அப்படியே சாப்பிட்டு வரலாம். கூடவே சேர்த்து நிறைய தண்ணீர் குடுங்க. வரப்போவது வெயில் காலம் என்பதால் சரும ஆரோக்கியத்திற்கு இப்படிப்பட்ட பழவகைகளும், காய் வகைகளும், தண்ணீரும் ரொம்ப ரொம்ப முக்கியம். அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -