உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்யக்கூடிய தீமைகளிலிருந்து நீங்கள் பாதிக்காமல் இருக்க இந்த ஒரு தாயத்து மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும்

thayathu1
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற இடத்தில் ஒருவருக்கு மற்றொருவர் எதிரியாக மாறி விடுகின்றனர். நமக்கும் மற்றவருக்கும் நேரடியாக எந்தவித சண்டை இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு வகையில் நாம் செய்யும் செயல்கள் மூலம் அவர்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நம்மை எதிரியாகவே பார்க்கின்றனர். இவ்வாறான எதிரிகள் நமக்கு நேரடியாக தெரிவதில்லை. நம்முடனேயே இருந்து நன்றாக பழகி நம்மையே எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒருவரை நேரடியாக எதிர்க்க மாட்டார்கள். மறைமுகமாக அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்று பல கெடுதல்களை விளைவிப்பார்கள். இவ்வாறான தீய எண்ணங்களிலிருந்தும், அவர்கள் செய்யும் கெடுதல்களிலிருந்தும் விடுபடுவதற்கு இந்த தாயத்தை நமது கையில் அல்லது இடுப்பில் கட்டியிருந்தால் பூதம். அவர்கள் செய்யும் தீய வினைகள் நம்மை பாதிக்காமல் இருக்கும். வாருங்கள் அது என்ன தாயத்து என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

enemy1

ஒருசிலர் வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு வேலை செய்யுமிடத்தில் தனக்கு தான் இந்த பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் திடீரென பதவி கிடைக்காமல் மற்றொருவருக்கு மாறிவிடும். இதுபோன்ற தருணங்களிலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். இவர்களுக்கு தெரிவதில்லை தன்னால் மற்றவர் பாதிக்கப்படுகின்றனர் என்று.

- Advertisement -

இப்படி மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கு நீங்கள்தான் காரணம் என சொல்லி இருப்பது நீங்கள் எவரையும் பழிவாங்குவதற்காக அனைத்தையும் செய்கிண்றீர்கள் என அர்த்தமில்லை. ஆனால் உங்களுக்கு ஒரு இடத்தில் லாபம் கிடைக்கிறது என்றால் அது மற்றவர்க்கு நஷ்டமாக மாறிவிடும். உங்களுக்கு பதவி கிடைக்கிறது என்றால் அது மற்றவர்க்கு கிடைக்காமல் போய்விடும். எனவே அவற்றை தடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் உங்களுக்கு தீமை விளைவிக்கும் இவ்வாறான வேலைகளை செய்கின்றனர்.

enemy

ஒருவர் உங்களை நேரடியாக சண்டைக்கு அழைத்தால் நாமும் நேரடியாக நமது பலத்தை காண்பித்து வெற்றி தோல்வியை உடனே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் இவ்வாறு கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் அவர்கள் செய்யும் கெடுதல்களையும் எப்படி தடுக்க முடியும். எனவே இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு தர்பைபுல் தாயத்து செய்து போட்டுக் கொண்டால் அவை நம்மை தீய எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும்.

- Advertisement -

தர்ப்பை புல்லை தர்ப்பணம் செய்யும் பொழுதும், ஹோமம் செய்யும் பொழுதும் மோதிர விரலில் மோதிரமாக அணிந்து கொள்வது என்பது வழக்கமாகும். தீமைகள், பாவங்கள், கெடுதல்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் அல்லது அழிக்கும் திறன் தர்பை புல்லிற்க்கு இருக்கிறது. எனவே அவற்றை நம்முடன் வைத்துக்கொண்டால் இவ்வாறான கெடுதல் எண்ணங்கள் நம்மை பாதிக்காமல் இருக்கும்.

dharpai-grass

அதற்காக ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு அதனை மெல்லியதாக சுருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தாயத்தை வாங்கிக் கொண்டு, அதனுள் இந்த தர்ப்பைப் புல்லை நுழைத்துக் கொண்டு, இஷ்ட தெய்வத்தின் கோவிலில் இருந்து வாங்கி வந்த விபூதியை சிறிதளவு இதனுடன் சேர்த்து, மூடி போட்டு மூடி கொள்ள வேண்டும். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து இடுப்பிலோ அல்லது கையிலோ கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிரிகளின் எந்தவித தாக்குதலாக இருந்தாலும் அதில் இருந்து நம்மால் விடுபட முடியும்.

- Advertisement -