உங்கள் எதிரியை உங்களை விட்டு விரட்டியடிக்க உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேல் ஹஸ்திர பூஜை பலன்

enemy
- Advertisement -

இந்த உலகத்தில் எவரும் நல்லவர் அல்ல. இந்த சொல் அனைவருக்கும் பொருந்தும். ஏனென்றால் நல்லவர் என்றால் அவருக்கு எதிரிகள் என்று எவரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் எதிரி என்று ஒருவர் நிச்சயம் இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் நேரடியாக தீங்கு இழைத்திக்க வேண்டும் என்று அவசியம் அல்ல. ஆனால் ஒருசில செயல்கள் நமது முன்னேற்றத்திற்காக நாம் செய்திருப்போம். அவை மற்ற நபர்களை மறைமுகமாக பாதித்திருக்கலாம். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் செயல்களும் நமக்கான எதிரிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறான எதிரிகளை நம்மை விட்டு விரட்டுவதற்காக செய்யப்படும் வேல் பூஜையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்து மதத்தில் பல வித கடவுள்கள் இருந்தாலும் மிகப் பெரும்பான்மையோர் வழிபடும் ஒரு தெய்வம் என்றால் அது முருகப் பெருமான் ஆவார். செவ்வாய் கிரகத்திற்கு உரிய முருகன் செவ்வாய் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமான் கார்த்திகேயன் என்றும் அனைவராலும் அன்பாக போற்றப்படுகிறார். தன்னுடன் வேலையும், மயிலையும் கொண்டு ஆனந்தமாக மக்களுக்கு காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான்.

- Advertisement -

முருக பக்தர்கள் அனுதினமும் முருகனை வேண்டி திருச்செந்தூர், பழனி, திருத்தணி போன்ற கோவில்களுக்கு தொடர்ந்து சென்று வருவார்கள். வீட்டிற்கு அருகே இருக்கும் முருகன் கோவிலுக்கும் தவறாமல் சென்று முருகனை வழிபட்டு வருவார்கள். தனது பாக்கெட்டில் முருகர் படத்தை தவிர வேறு ஒன்றையும் வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக முருகரை மனதோடு வைத்திருக்க தனது உடம்பில் பச்சை குத்திக் கொண்டும் இருக்கின்றனர். இப்படி முருகர் மீது கொண்டுள்ள பக்திக்கு அளவே இல்லாமல் மக்கள் அவரைத் தொழுது வருகின்றனர்.

இவ்வளவு அன்பு கொண்ட பக்தன் மீது கடவுளும் அளவுக்கதிகமான அன்பு கொண்டிருக்கிறார். எனவே ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் எதிரிகளை இவர் தனது வேலை கொண்டு விரட்டி விடுகிறார். அவ்வாறு உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலகி இருக்க உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேல் ஹஸ்திர பூஜை.

- Advertisement -

முதலில் ஒரு கலச சொம்பை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலச சொம்பு முழுவதும் பச்சை அரிசி கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வேலை எடுத்துக் கொண்டு பச்சை அரிசியின் நடுவே அழுத்தி நிற்க வைக்க வேண்டும். பிறகு அந்த வேலிற்க்கு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, சிறிய மலர் வைக்க வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்னர் முருகப்பெருமானின் வேலிருக்கும் பூஜைகள் செய்து, தீபாராதனை செய்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எனக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கும் என் எதிரி என அவரது பெயரை உச்சரித்து, அவர்கள் செய்யும் தீய வினைகள் அனைத்தும் என்னை பாதிக்காமல் இருக்க வேண்டும். அவர்களின் தொல்லை என்னை விட்டு நீங்க வேண்டுமென மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -