ஜனவரி, மாத ஏகாதேசி வழிபாடு

perumal1
- Advertisement -

பெருமாளுக்கு உரிய விரதங்களில் இந்த ஏகாதேசி திதி மிக மிக சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் மாதம்தோறும் வரக்கூடிய ஏகாதேசி திதி. ஏகாதேசியில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். சந்ததி வளரும் என்பது நம்முடைய இந்து சாஸ்திரத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

சில பேர் வருடத்தில் ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதேசிக்கு மட்டும்தான் விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த மாதந்தோறும் வரக்கூடிய ஏகாதேசி தினத்தில் கூட பெருமாளை நினைத்து விரதம் இருப்பார்கள். இப்படி விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருள் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பெருமாள் வழிபாடு என்றாலே அது செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய ஒரு வழிபாடு. இன்று மார்கழி மாதம் வந்திருக்கக்கூடிய, இந்த ஆங்கில புது வருட பிறப்பில் முதலில் வந்திருக்கக்கூடிய இந்த ஏகாதேசி திதியில் நாம் செய்யக்கூடிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பெருமாளை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை சொல்லி, இந்த பொருளை பணம் வைக்கும் பெட்டியில் தூவி விடுங்கள். உங்களுடைய கடன் சுமை குறைந்து, வருமானம் பல மடங்காக பெருகும். அந்த பொருள் என்ன. நாளைய தினம் நாம் சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மாத ஏகாதேசி பெருமாள் வழிபாடு

இந்த ஏகாதேசி திதியானது 6-1-2024 இரவு 9:56 மணிக்கு பிறந்து விட்டது. ஜனவரி-7-2024 ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று இரவு 10.10 வரை ஏகாதேசி திதியானது இருக்கின்றது. நீங்கள் பெருமாளை நினைத்து விரதம் இருந்தாலும் சரி, விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு பெருமாள் நிச்சயம் அருள் ஆசையை வழங்குவார். உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து வைப்பார்.

இன்று இரவு 9 மணிக்கு முன்பாக எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்குதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஜவ்வாது பொடி, பச்சை கற்பூரம், இரண்டு பொருட்கள் தேவை. ஜவ்வாது பொடியில் பச்சைக் கற்பூரத்தை நசுக்கி கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதிகம் வேண்டாம் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடி நமக்கு இருந்தால் போதும். ஒரு சின்ன கிண்ணத்தில் பெருமாளின் பாதத்தில் இந்த இரண்டு பொருளையும் கலந்து வைத்துவிட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பெருமாளையும் மகாலட்சுமி தேவியையும் மனதார வேண்டிக் கொண்டு இந்த பொடியை கொண்டு போய் அப்படியே பணப்பெட்டியில் தூவி விடுங்கள்.

அவ்வளவுதான் பரிகாரம் முடிந்தது நாளைய தினம் ஏகாதசி திதி இருப்பதால் நீங்கள் செய்யக்கூடிய இந்த பரிகாரத்திற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். பெருமாள் மனம் மகிழ்ந்து உங்களுக்கான வரங்களை கொடுப்பார். அது மட்டும் இல்லாமல் கடன் சுமையை குறைத்து விடுவார், வருமானத்தை பெருக்கிக் கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்

ஜவ்வாது பொடிக்கும் பச்சை கற்பூரத்திற்கும் பணத்தை வசியம் செய்யக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. பச்சை கற்பூரம் என்ற பொருளை அவ்வளவு குறைவாக எடை போட்டு விடாதீங்க. திருப்பதி பெருமாளுக்கு இந்த பச்சை கற்பூரம் இல்லாத நாளே இல்லை. பச்சை கற்பூரம் வைத்துதான் அங்கு பிரசாதங்களும் அலங்காரங்களும் பிரத்தியேகமாக செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாளுக்குரிய இந்த ஏகாதேசி திதியில் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -