வைகுண்ட ஏகாதேசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ekadesi2
- Advertisement -

மார்கழி மாதம் வரவிருக்கும் இந்த ஏகாதேசி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு வாழும்போது வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்றும், வாழ்ந்து முடித்த பிறகு அந்த வைகுண்டத்தில், சொர்க்கத்தில் விஷ்ணு பகவானின் பாதங்களில் இடம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த வருட ஏகாதசி வழிபாடு 23.12.2023 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதாவது சனிக்கிழமை அதிகாலை தான் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

நாளை சில பேரால் சாப்பிடாமல் உபவாசம் இருந்து விரதம் இருக்க முடியும். சில பேரால் இப்படி பட்டினி கிடந்து விரதம் இருக்க முடியாது. சில பேர் சனிக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்து விரதத்தை மேற்கொள்வார்கள். இப்படி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு மட்டும்தான் மோட்சம் கிடைக்குமா? விரதம் எடுக்க முடியாதவர்கள் கண் முழிக்க முடியாதவர்கள், பெருமாளை எப்படி வழிபாடு செய்வது.

- Advertisement -

தூய்மையான அன்போடு சுத்தமான மனதோடு நீங்கள் பின் சொல்ல கூடிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சாப்பிடாமல் உபவாசம் இருந்து, கண் விழித்து பெருமாளை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை விட பல நூறு மடங்கு அதிகம் பலன், விரதம் இல்லாதவர்களுக்கும் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதேசி இரவு கண் விழிக்காதவர்களுக்கும் மோட்சம் கிடைக்கும், இந்த மந்திரத்தை உச்சரித்தால். நாளைய தினம் வைகுண்ட ஏகாதேசி அன்று நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

நாளை சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில், ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப் போகிறார்கள் அல்லவா. அந்த நேரத்தில் நீங்கள் வீட்டில் பூஜை அறையில், பூஜைக்கு தயாராக இருக்க வேண்டும். அப்போது நாளை கொஞ்சம் சீக்கிரம் கண் விழித்து 4 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு, வீட்டில் விளக்கு ஏற்றி விடுங்கள். வாசலில் கோலம் போட்டு, வாசலிலும் விளக்கு ஏற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

சொர்க்கவாசல் திறப்பது டிவியில் உங்களுக்கு ஒளிபரப்பாகும். அதை பார்த்துவிட்டு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். காலை வீட்டில் பூஜை செய்யும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எதுவும் சாப்பிடாதீர்கள். வெறும் வயிற்றில் பெருமாளை நினைத்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் விஷ்ணு பகவானின் ஆசீர்வாதம், மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

வைகுண்ட ஏகாதேசி மந்திரம்

ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் தனாய நமோ நமஹ

இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறை சொல்லலநமோ, அல்லது 108 முறை அல்லது அதற்கு மேல் உச்சரித்தாலும் தவறு கிடையாது. இந்த சமயத்தில் பெருமாளுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை வையுங்கள். பஞ்சபாத்திர தண்ணீரில் கொஞ்சமாக துளசி, பச்சை கற்பூரம், போட்டு பெருமாள் முன்பாக வைத்து விடுங்கள்.

பூஜை முடித்துவிட்டு வழக்கம்போல நீங்கள் உங்களுடைய வேலையை தொடங்கலாம். நீங்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்தாலும் சரி, மூன்று வேலையும் வயிறு நிரம்ப சாப்பிட்டு பெருமாளை வழிபாடு செய்தாலும் சரி, உங்களுக்கு அந்த பெருமாளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசியில் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்

மந்திரம் நாமங்களுக்கு அந்த சக்தி இருக்கிறது. பெருமாளின் அருள் ஆசியைப் பெற இந்த மந்திர நாமங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -