வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த எதுவாக இருந்தாலும் அதை மீண்டும் திரும்ப பெற இந்த தெய்வத்தை வழிபட்டாலே போதும். உங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் இருந்தாலும் அதை மீட்டு கொடுத்து விடுவார்.

kaartha verya arjunar valipadu
- Advertisement -

நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு பொருளை தொலைத்து விட்டு தேடி கஷ்டப்பட்டு இருப்போம். அது திரும்ப கிடைக்கும் பொழுது அதில் இருக்கும் மகிழ்ச்சியே தனி தான். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது திரும்பவே கிடைக்கவில்லை என்றால் நம்முடைய கடைசி காலம் வரைக்கும் நம் மனதில் அது ஒரு வலியை தந்து கொண்டுதான் இருக்கும். அவ்வாறு நாம் தொலைத்த பொருள் அது பணமோ, நகையோ, உறவோ, சொந்தமோ, நட்போ எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

நம்முடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உதவக்கூடிய தெய்வங்கள் பல இருக்கின்றன. அதிலும் குறிப்பாக உக்கிரமான தெய்வங்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக வணங்கப்படுகின்றன. அந்த உக்கிர தெய்வங்களை நாம் முறையாக வணங்கும் பொழுது அவர்கள் நம்முடைய பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது. அந்த வகையில் இழந்த பொருளையோ, செல்வத்தையோ திரும்பப் பெறுவதற்கு நாம் வணங்க வேண்டிய தெய்வமாக கார்த்த வீர்ய அர்ஜுனர் திகழ்கிறார்.

- Advertisement -

மகாவிஷ்ணுவை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் சுதர்சன சக்கரத்தையும் தெரியும். மிகவும் மகத்துவம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவர் தான் இந்த கார்த்த வீர்ய அர்ஜுனர். ஆயிரம் கரங்களைக் கொண்டு உக்கிரமான தெய்வமாக இவர் திகழ்கிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலான பெருமாள் ஆலயங்களில் இவரின் சிலை வைக்கவில்லை. ஆனால் திண்டுக்கல்லில் இருக்கும் பெருமாள் கோவிலில் மட்டும் இவர் பிரம்மாண்ட உருவத்தில் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் இழந்தது எதுவாக இருந்தாலும் அது திரும்ப நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் இல்லத்தில் இருக்கும் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தில் கார்த்தவீர்ய அர்ஜுனரை ஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு அவரின் மூல மந்திரத்தை உச்சரிக்கலாம். மூல மந்திரம் தெரியவில்லை என்பவர்கள் அவருடைய நாமத்தையே கூறினால் போதும்.

- Advertisement -

“ஓம் கார்த்த வீர்ய அர்ஜுனாய நமஹ”
அவரை மனதார நினைத்து பக்தியுடன் அவரின் பெயரை நாம் உச்சரித்தோம் என்றால் நாம் தொலைத்தது எதுவாக இருந்தாலும் அவருடைய ஆயிரம் கைகள் அதை திருப்பிக் கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கும். மேலும் நம்மிடம் இருக்கக்கூடிய எந்த செல்வத்தையும் யாராலும் அபகரிக்க முடியாத அளவு நமக்கு பாதுகாப்பாக அவர் திகழ்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நீங்கள் தொலைத்த பொருள் அழிக்கப்பட்டு விட்டால் திரும்ப கிடைக்காது. அதை தவிர்த்து அது வேறு யாருடைய கைகளிலாவது இருக்கும் பட்சத்தில் அந்தப் பொருளே நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் தேடி வரும் அளவிற்கு கார்த்த வீர்ய அர்ஜுனாயர் வழிகாட்டுவார்.

இதையும் படிக்கலாமே: என்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்க வில்லையா? இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு உங்களைத் தேடி வரும்.

பணத்தை இழந்தால் சம்பாதித்து விடலாம். உறவை இழந்தால் சம்பாதிக்க முடியுமா? சம்பாதிக்க முடியாத செல்வத்தையும் நம்மிடம் திரும்ப ஒப்படைக்கும் ஆற்றல்மிக்க கார்த்த வீர்ய அர்ஜுனரை நாமும் வணங்கி இழந்த செல்வம் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -