என்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்க வில்லையா? இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு உங்களைத் தேடி வரும்.

salary suriya bhagavan job
- Advertisement -

வேலைக்கு செல்லும் அனைவருமே சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் வேலையில் தனக்கான ஒரு அங்கீகாரம் இல்லை தனக்கு பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் நல்ல ஒரு அங்கீகாரத்துடன் பதவி உயர்வு சம்பள உயர்வு என்று முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள் நாம் இன்னமும் உழைத்துக் கொண்டே இருக்கிறோம், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்கான பலன் என்னும் கிடைக்கவில்லையே என்பது தான். இப்படியான இந்தப் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க கூடிய ஒரு பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தன்னுடைய உழைப்புக்கேற்ற ஊதியமும் பதவி உயர்வு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையை செய்வதில் ஒரு மன நிறைவே இருக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அதற்காக பாடுபட்டு உழைக்கவும் செய்வார்கள். அப்படி உழைத்தும் அதற்கான பலன் இல்லை என்றால் அவர்களுக்கு மேற்கொண்டு உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே கூட இல்லாமல் போய் விடும். இது போன்ற இன்னல்களில் சிக்கியிருப்பவர்கள் இந்த எளிமையான பரிகார முறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க
இந்த பரிகாரத்திற்கு நாம் இரண்டு பொருள்களை மட்டும் வாங்க வேண்டும் ஒன்று நாயுருவி பொடி மற்றொன்று கஸ்தூரி மஞ்சள் பொடி. இதில் நாயுருவி பொடியானது சூரிய பகவானுக்குரியதாக பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். அதே போல் மஞ்சள் மகாலட்சுமி தாயார் அம்சமாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டையும் சேர்த்து செய்யும் போது இந்த பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலனும் தரும்.

இந்த நாயுருவி பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி இது இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்பாக சாம்பிராணி தூபம் போட்டு அதில் இந்த பொடியையும் சேர்த்து போடுங்கள். வேலைக்கு செல்பவர்கள் மாலையில் போட முடியாது என்றால் வீட்டிற்கு எப்போது வந்தாலும் வந்தவுடன் இதை போட்டு விட்டு தீபம் ஏற்றி சிறிது நேரம் கழித்து உறங்க செல்லலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை யாருக்காக செய்கிறீர்களோ அவர்களின் பிறந்த நாள் அல்லது பிறந்த கிழமை இந்த இரண்டில் ஏதாவது ஒரு நாளில் இந்த தூபத்தை போட துவங்குங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்ந்து போட்டுக் கொள்ளலாம். இதைத் தொடங்கும் நாள் மட்டும் தான் கணக்கு. அதன் பிறகு இதை தொடர்ந்து போடுவதாலும் எந்த தவறும் இல்லை முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த மந்திரத்தை சொன்னால், குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வேலையில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சம்பள உயர்வு பதவி, உயர்வு அனைத்தும் கிடைக்க பெற்று நல்ல முறையில் முன்னுக்கு வருவீர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் போல உங்கள் சிறப்பான பணிகளோடு இந்த பரிகாரத்தையும் செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -