வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்திலும் இறையருள் பெற பரிகாரம்

vilakku
- Advertisement -

எந்த காரணமுமே இல்லாமல் பத்து நாட்கள் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது. சில சூழ்நிலைகள் வரும். தீட்டு அல்லது ஏதாவது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அப்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விடுவோம். வீட்டில் விளக்கு ஏற்ற முடியாது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் விளக்கு ஏற்ற முடியாது. அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டில் ஏதோ ஒரு திருப்தி இல்லாத சூழ்நிலை நிலவும்.

இருள் சூழ்ந்த சூழ்நிலை. மின்விளக்குகள் இருந்தாலும், விளக்கு ஏற்ற வில்லை என்றால் அது நமக்கு மனநிறைவை கொடுக்காது அல்லவா. அந்த சமயத்தில் எதிர்மறை ஆற்றல் நம் வீட்டிற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. அப்போது வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்தில் இந்த நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து நம் வீட்டை பாதுகாக்க என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

வீட்டில் விளக்கு ஏற்றாத நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரு கலச சொம்பு எடுத்துக்கோங்க. சின்னதாக பித்தளை சொம்பு எல்லார் வீட்டிலும் இருக்கும். அது பூஜைக்கு பயன்படுத்தும் சொம்பாக இருந்தாலும், அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். அந்த சொம்பு நிறைய குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் கொஞ்சமாக கருப்பு எள்ளு எடுத்து தூவி விடுங்கள். 1 ஸ்பூன் அளவு எள்ளு போட்டாலும் போதும்.

இந்த சொம்பை மூடி தரையில் ஒரு ஓரமாக வைத்து விட வேண்டும். வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் இந்த தண்ணீர் நிரப்பி, எள்ளு போட்ட சோம்பை வைக்கலாம். வீட்டிலிருந்து வெளியே செல்லும் சமயத்தில் இந்த சொம்பை தயார் செய்து, தரையில் வைத்து விட்டால் பத்து நாட்கள் வீடு பூட்டிருந்தாலும், வீட்டிற்குள் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலையிலும் உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழையாமல் இருக்கும்.

- Advertisement -

வீடு இறையருள் நிறைந்த படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயம் பத்து நாள் வெளியூருக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பும் போது, வீட்டிற்குள் வரும்போது, ஏதோ வீட்டில் மூதேவி அடைந்தது போல தோன்றும் அல்லவா. அதுபோல எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் வீட்டில் இருப்பது போல நமக்கு தோன்றாமலும் இருக்கும், இந்த பரிகாரத்தை செய்யும் போது. தினமும் விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காண்பித்து வீட்டை பாசிட்டிவ் ஆக வைத்திருக்கக் கூடிய எனர்ஜியை, இந்த ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த டேபிள் மேலும் இந்த சொம்பை வைக்கக்கூடாது. தரையில் படும்படிதான் இந்த சொம்பு இருக்கணும். இந்த தண்ணீரை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கணும். அதை கவனித்துக் கொள்ளுங்கள். மாதவிலக்கு நாட்களில் சில வீடுகளில் மூன்று நாட்கள் விளக்கு ஏற்ற மாட்டார்கள். சில வீடுகளில் ஐந்து நாட்கள் விளக்கு ஏற்ற மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி பரவி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் கையில் பணம் தங்க பூஜை

வீட்டிலேயே தான் இருக்கிறீர்கள் எனும்போது இந்த தண்ணீரை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வைக்கலாம். சொம்பில் இருக்கும் பழைய தண்ணீரை கீழே கொட்டி விட்டு புதுசாக தண்ணீரை ஊற்றி புதுசாக எள் போட்டு வைப்பது சிறப்பான பலனை தரும். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாட்டு முறை உங்களுக்கு பயன்படும் என்றால் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -