பெண்கள் கையில் பணம் தங்க பூஜை

annaporanai
- Advertisement -

இந்த சமூகம் எப்போதுமே வீட்டில் இருக்கும் பெண்களை ஒரு படி குறைவாகத்தான் பேசும். ஆண்களை ஒப்பிடும்போது, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மரியாதையையும் மிக மிகக் குறைவானதாக இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் தவறு. வீட்டில் மனைவியோ அல்லது அம்மாவோ மகளோ யாராக இருக்கட்டும்.

பெண்களாக இருந்து வீட்டை பார்த்துக் கொள்பவர்கள், ஒருநாள் அந்த வீட்டில் இல்லை என்றால் அந்த வீட்டினுடைய நிலைமை என்ன ஆகும். ஆகவே வீட்டில் இருக்கும் பெண்களை நீங்கள் சும்மாதான் இருக்கீங்க என்று சொல்லி மட்டம் தட்டி யாரும் பேசாதீங்க. அவர்கள் இல்லை என்றால் வீடும் இல்லை. வீதியும் இல்லை. இந்த ஊர் உலகமும் இல்லை என்ற தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

பல சிறப்பு அம்சங்களை கொண்ட பெண்களே உங்கள் குடும்பத்தை சீரும் சிறப்புமாக செழிப்போடு வைத்துக் கொள்ள மாதத்தில் ஒரு நாளாவது உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜையை நீங்கள் பூஜை அறையில் செய்யப்போவது கிடையாது. ஏனென்றால் பூஜையறையில் தினம் தினம் பூஜை, வாரத்தில் இரண்டு நாள் பூஜை என்று பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். இந்த பூஜையை செய்யப்போகும் இடம் சமையலறை.

பெண்கள் கையில் பணம் சேர பூஜை

பூஜை அறையை மட்டும் பெண்கள் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது. மாதத்தில் ஒரு முறையாவது அந்த சமையலறையை சுத்தம் செய்து அடுப்புக்கு மேலே அரிசி மாவை அரைத்து, சின்னதாக மாக்கோலம் போட்டு, மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, கொஞ்சமாக அட்சதையை அந்த கோலத்தின் மீது வையுங்கள். ஒரு சின்ன பூவை வையுங்கள். மஞ்சளை கரைத்து சமையலறையில் அடுப்புக்கு மேல் பக்கம் இருக்கும் சுவற்றில் ஸ்வஸ்திக் சின்னம் போடுங்கள்.

- Advertisement -

அந்த சுவஸ்திக் சின்னத்துக்கு நடுவே ஒரு சின்ன குங்குமப்பொட்டு வையுங்க. பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தீப தூப ஆராதனையை கொண்டு வந்து இந்த அடுப்புக்கும் காண்பியுங்கள். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பூஜையில் இப்படி செய்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. எங்களால் முடியாது நேரம் இன்மை காரணமாக வேலை பளு அதிகமாக இருக்கிறது என்பவர்கள் மாதத்தில் ஒரு முறையாவது சமையலறையில் அன்னபூரணியை நினைத்து இந்த வழிபாடை செய்து வாருங்கள்.

உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமோடு பணக்கஷ்டமும் இல்லாமல் சிறப்பாக மேலோங்கி நிற்கும். அதற்காக அடுப்பறையில் எடுத்துட்டு போய் கற்பூரத்தை சிலிண்டருக்கு பக்கத்தில் காண்பிக்க கூடாது. ஜாக்கிரதையாக இந்த பூஜையை செய்யுங்கள். இந்த சின்ன பூஜையை மாதம் ஒருமுறை செய்தாலே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைத்துவிடும். கையில் காசு புரள தொடங்கிவிடும். சந்தோஷம் இரட்டிப்பாகும். எளிமையான வழிபாட்டு முறைதான்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தேய்பிறை ஏகாதசி தீப வழிபாடு

முடிந்த பெண்கள் இதை பின்பற்றி பாருங்கள். கஷ்டத்தில் இருக்கும் உங்கள் குடும்பம் சீக்கிரம், அந்தக் கஷ்டத்தை எல்லாம் கடந்து மீண்டு வந்து விடும். சந்தோஷத்தை நிறைவாக உங்கள் குடும்பத்திற்கு கொடுக்க இந்த வழிபாடு கை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -