ராஜகனியாகிய எலுமிச்சையை கொண்டு இதை ஒரு முறை செய்தால் எப்பேர்ப்பட்ட காரிய தடையும் நீங்கி நினைத்தவை கைகூடும்

lemon
- Advertisement -

உலகில் எத்தனையோ பழ வகைகள் இருந்தாலும் ஆன்மீக ரீதியாக எலுமிச்சைக்கென்று சில தனி சிறப்புகள் உண்டு. அதனாலேயே அதை ராஜ கனி என்கிறோம். இந்த எலுமிச்சையை கொண்டு செய்யக்கூடிய ஒரு மிக எளிமையான தாந்த்ரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக மனக்கஷ்டம் என்பது மனிதராய் பிறந்த அனைவருக்குமே உண்டு. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் ஒருவர் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் பயனற்று போனாலோ அல்லது வேலையை செய்யவே முடியாமல் போனாலோ அதனால் ஏற்படக்கூடிய மன கஷ்டத்திற்கு அளவே இல்லை. இதில் இருந்து விடுபட்டு, காரியங்கள் வெற்றி பெற ஒரு பரிகாரம் இதோ.

எலுமிச்சை

எதை செய்தாலும் வெற்றிபெற முடியவில்லை, காரிய தடை மிக அதிகமாக உள்ளது, மனதில் நிம்மதியே இல்லை இப்படியான பல தொல்லைகளில் இருப்பவர்களுக்கு கை மேல் பலன் தரக்கூடிய பரிகாரம் தான் எலுமிச்சை பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்த சில நாட்களிலேயே நமக்கான பிரச்சனைகள் குறைந்து, நல்லதொரு வழி பிறப்பதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

- Advertisement -

முதலாவதாக ஒரு எலுமிச்சையை எடுத்துக்கொண்டு அதோடு ஒரு நாணயத்தை சேர்த்து வலது கையில் வைத்துக்கொள்ளவேண்டும். 1 ரூபாய், 5 ரூபாய் இப்படி ஒற்றைப்படை நாணயமாக இருப்பது சிறப்பு. நாணயத்தையும் எலுமிச்சையையும் வலது கையில் சேர்த்து வைத்து கையை மூடிக்கொண்டு நெஞ்சு பகுதிக்கு அருகில் கையை வைத்துக்கொள்ள வேண்டும்.

lemon

அதன் பிறகு, நமது குலதெய்வத்தையோ, அல்லது இஷ்ட தெய்வத்தையோ நினைத்துக்கொண்டு, நமக்கு எந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமோ அந்த பிரச்சனையை சொல்லி அதற்கான தீர்வை அளிக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி வேண்டிக்கொண்ட பிறகு அந்த எலுமிச்சையையும் நாணயத்தையும் பூஜை அறையில் அப்படியே வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

சில நாட்கள் செல்ல செல்ல நாம் எந்த பிரச்சனை குறித்து வேண்டினோமோ அந்த பிரச்சனைக்கான தீர்வு நமக்கு கிடைப்பதற்கான அறிகுறி தென்பட துவங்கும். ஒரு கட்டத்தில் நமது பிரச்சனைக்கான தீர்வு முழுமையாக கிடைக்கும். அந்த சமயத்தில் அருகில் உள்ள கோயிலிற்கு சென்று அந்த எலுமிச்சை பழத்தையும், நாணயத்தையும் உண்டியலில் செலுத்திவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு வரவேண்டும்.

lemon

இந்த பரிகாரத்தை பொறுத்தவரை, காரியத்தடை நீங்க இதை செய்பவர்கள் பிள்ளையாரை வேண்டி இதை செய்வது நல்லது. அதே சமயம், பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை வீட்டில் இருக்கும் வரை, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக்கு விரதம் இருப்பதன் மூலம் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

- Advertisement -