ஈரேழு ஜென்மமாக தொடரும் பாவங்கள் நம்மை விட்டு அகல, இந்த மரத்தை 6 முறை சுற்றி வந்தாலே போதும். வாழ்வு வளம் பெறும்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக செழிப்பாக முன்னேற்றத்தில் செல்ல, செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்க, எத்தனையோ பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சிலரால் சில பரிகாரங்களை செய்ய முடியும். சில பேரால் சில பரிகாரங்களை செலவு செய்து செய்ய முடியாது. சாதாரணமாக இருப்பவர்கள் கூட இந்த ஒரு பரிகாரத்தை சுலபமாக செய்து பலனை அடைந்து விடலாம். இந்த ஒரு மரம் இருக்கக்கூடிய கோவிலை தேடிக் கண்டுபிடியுங்கள். அந்த கோவிலுக்கு சென்று, பின் சொல்லக்கூடிய பரிகாரத்தைச் செய்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் வரும் கஷ்டம் நஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்

வன்னி மரம். பெரும்பாலும் சிவன் ஆலயங்களில் இந்த மரம் இருக்கும். வன்னிமரம் இருக்கக்கூடிய கோயிலாக பார்த்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலுக்கு சென்று வன்னி மரத்திற்கு முன்பாக 6 மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த வன்னி மரத்தை 6 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு வன்னி மரத்தில் இருந்து கொஞ்சமாக இலையை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு மனதார இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று. பின்பு உங்கள் கையில் இருக்கும் இலையை ஒரு பேப்பரில் வைத்து மடித்து அப்படியே உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலை காய்ந்து போனாலும் பரவாயில்லை அப்படியே உங்கள் வீட்டில் இருக்கட்டும்.

 

- Advertisement -

திருச்சிக்கு அருகில் திருப்பட்டூர் பிரம்மா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலிலும் இந்த வன்னிமரம் உள்ளது. உங்களுடைய ஜாதகத்தை கொண்டுபோய் பிரம்மா கோவிலில் வைத்து பூஜை செய்து கொண்டு வன்னிமரத்தை வலம் வந்தால், உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் அத்தனை கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக செயல்பட தொடங்கும். கெட்ட நேரம் கூட நல்ல நிறமாக மாறிவிடும்.

உங்கள் ஜாதக கட்டத்தில் சூரிய திசை நடந்தாலோ, சூரியன் நீச்சம் அடைந்து இருந்தாலும், அல்லது சூரிய பகவானால் எந்த ஒரு பாதிப்பு இருந்தாலும் சரி அந்த பாதிப்பை சரிசெய்ய இந்த பரிகாரம் உங்களுக்கு உடனடியாக நல்லதொரு பலனை கொடுக்கும். இதோடு மட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் பகைவர்களை கூட நண்பர்களாக மாற்றக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்க்கு உண்டு.

எழெழு ஜென்மம் ஆக நம்மை தொடரும் பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கவும் இந்த வன்னிமர பரிகாரம் நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பிரம்மா கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள், உங்களுடைய ஊருக்கு அருகில் எந்த கோவிலில் வன்னி மரம் இருந்தாலும் மேல் சொன்ன பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -