எதிரி தொல்லை நீங்க எளிய பரிகாரம்

narachimmar dheepam
- Advertisement -

போட்டி பொறாமை நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவது இயலாத காரியமாக உள்ளது. ஒரு புறம் நாம் பாடுபட்டு முன்னேறிக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருப்போம். மறுபுறம் அதை எல்லாம் தவிடு பொடியாக்க நம்மை அறியாமலே நம்முடன் இருப்பவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். இது யார் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை எல்லாம் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

இப்படியானவர்களின் சூழ்ச்சி வலையிலிருந்து தப்பித்து நம்முடைய வாழ்க்கையை நல்ல முறையில் வாழ ஒரு சில பரிகார முறைகளும் வழிபாட்டு முறைகளும் உள்ளது. அதில் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டு முறையை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க

இதை பரிகாரம் வழிபாடு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மிக மிக எளிமையான சக்தி வாய்ந்த ஒன்று. இந்த வழிபாட்டை நீங்கள் கோவிலில் சென்று செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. வீட்டில் உங்கள் பூஜை அறையிலேயே ஒரே ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

இதற்கு சிகப்பு நிறத்தினால் ஆன திரியை வாங்க வேண்டும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த திரி போட்டு உங்கள் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எரியும் அகல் விளக்கை ஒரு சிறிய தட்டில் வைத்து அதை சுற்றி மலர்கள் வைத்து ஏற்றி வழிபடுங்கள். இந்த தீபம் எரியும் போது அதன் முன் அமர்ந்து நரசிம்மரை மனதார நினைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு உங்களுடைய எதிரி யாரோ தெரிந்தால் அவருடைய பெயரை சொல்லி அவரிடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பும் அவர் உங்கள் வழியில் அவர் வராமல் விலகி விட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை எதிரி யார் என்றே தெரியவில்லை என்றால் நரசிம்மரிடம் இந்த பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இப்படி வேண்டும் போது ஒம் நரசிம்மராய நமக என்ற இந்த நாமத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இந்த தீபத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். இப்படி எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று வழிபடுவதால் நம்முடைய எதிரிக்கு நம்மால் அழிவு ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டாம் அவர்கள் உங்கள் பக்கம் வராத அளவிற்கு அவர்கள் மனநிலை மாறுமே தவிர அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய குலதெய்வ வழிபாடு

நாம் வாழும் காலம் முழுவதும் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதற்கு மாற்று வழியே கிடையாது. அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு பழிவாங்கவும் அல்லது அவர்களை ஒடுக்கவும் நம்முடைய நேரத்தை வீணாக்காமல், இது போல எளிய பரிகாரத்தை செய்து கொண்டு நம்முடைய வாழ்க்கை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது தான் புத்திசாலித்தனம். இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பிடித்திருக்குமேயானால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -