சொந்த வீடு அமைய குலதெய்வ வழிபாடு

amman house
- Advertisement -

சொந்த வீடு அமைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஒரே ஒரு நாளாவது சொந்த வீட்டில் நிம்மதியாக உண்டு உறங்கி வாழ்ந்து விட மாட்டோமா என்ற ஏக்க பெருமூச்சுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் இருக்கத் தான் செய்கிறார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும் எனில் முதலில் அதற்கான வாய்ப்புகளும் வழிகளும் கிடைக்க வேண்டும்.

நல்ல வேலை, நிரந்தர வருமானம், சேமிப்பு இவை எல்லாம் சரிவர கைகூடினால் தான் சொந்த வீடு வாங்குவதற்கான யோசனையே நம்மால் செய்ய முடியும். இப்படி அனைத்தையும் கொடுத்து வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு சென்று நிம்மதியான வாழ்க்கை வழ குலதெய்வத்தை இந்த முறையில் வழிபட்டால் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன வழிமுறை எப்படி என்பதெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சொந்த வீடு அமைய குலதெய்வ வழிபாடு

இந்த வழிபாட்டை குலதெய்வம் யாரென்றே தெரியாதவர்கள் கூட செய்யலாம். குலதெய்வம் எதுவென்று தெரிந்தவர்கள் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்லுங்கள். இதை தெரியாதவர்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

முதலில் கோவிலுக்குள் சென்று ஒரு முறை தெய்வத்தை வணங்கிய பிறகு கோவிலை விட்டு வெளியில் வந்து விடுங்கள. கோவிலை சுற்றி இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கு அமர்ந்து 27 அகல் விளக்கை வாங்கி தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு விளக்கில் பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபமானது மேற்கு நோக்கி எறிய வேண்டும்.

- Advertisement -

இப்போது நீங்களும் மேற்கு நோக்கி அமருங்கள். அதாவது உங்களுக்கு முன்பாக இந்த 27 அகல் விளக்கும் எரிய வேண்டும். இதை ஒன்பது ஒன்பதாக மூன்று வரிசையில் வைத்து எரிய வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இன்னொரு அகல் விளக்கை எடுத்து உங்களுக்கும் தெரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கும் நடுவில் வைத்து அதில் பச்சை கற்பூரத்தை கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து கொளுத்தி விடுங்கள்.

இப்போது உங்கள் கைகளை கூப்பி கண்களை மூடி மனதார அந்த எரிந்து கொண்டிருக்கும் தீபத்தையும், பச்சைக் கற்பூரத்தையும் பார்த்து குலதெய்வத்திடம் உங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் அதற்கான வாய்ப்பு தர வேண்டும் என்று பச்சை கற்பூரம் அணையும் வரை வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மறுபடியும் ஆலயத்திற்குள் சென்று வணங்கிய பிறகு அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுங்கள். விளக்குகள் அங்கேயே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது வீட்டுக்கு கொண்டு வந்த இந்த மண்ணை சிறிய மண்குடுவையில் போட்டு பச்சை நிறத்திலான துணி அது பட்டு அல்லது காட்டன் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை வைத்து இந்த மண்குடுவையை மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் இந்த குடுவைக்கு கற்பூர தீப ஆராதனை காட்டி உங்கள் சொந்த வீடு கனவு நினைவாக வேண்டும் என்று குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்.

இந்த வழிபாட்டை செய்த சில தினங்களுக்குள்ளாகவே நீங்கள் எப்பேர்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சொந்த வீடு அமைவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -