எதிரி பிரச்சினையே இருக்கக் கூடாது என்றால், அம்பாளுக்கு இந்த பூவை வைத்து வழிபாடு செய்யுங்கள். ஆயசுக்கும் எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டாங்க.

amman
- Advertisement -

தினம் தினம் போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் எதிரியின் பிரச்சனை இல்லாமல் வாழ்வது ரொம்பவும் கடினம். எதிரிகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியமும் இருக்காது. இருப்பினும் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்கு எதிரிகள் ரொம்பவும் பிரச்சனையாக உள்ளார்கள். செய்யக்கூடிய தொழிலில் எதிரி, சொந்த பந்தங்களில் எதிரி, அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை, அவர்களும் எதிரியாக உள்ளார்கள். எதிரியால் ஏவல் பில்லி சூனிய பிரச்சனை இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யும்போது அதன் மூலம் பெரிய அளவில் பிரச்சனைகள் நம்மை தாக்காது. எல்லாவிதமான எதிரி பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க அம்பாள் வழிபாட்டை எந்த பூவை கொண்டு மேற்கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் சுலபமாக பூத்துக் கிடைப்பதாலோ என்னமோ இந்த பூவின் அருமை பெருமை நமக்கு தெரிவதே கிடையாது. வேறு வழியே இல்லை மற்ற பூக்கள் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் நம் வீட்டுச் செடியில் பூத்துக் குலுங்கும் இந்த பூவை பறித்து சுவாமிக்கு போடுவோம். ஆனால் அம்மனுக்கு மிக மிக பிடித்த பூக்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இந்த பூதான்.

- Advertisement -

ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றால் இறைவனுக்கு இந்த பூவை சூட்டி வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் உடனே நடக்கும். இத்தனை சக்திகளைக் கொண்ட அந்த பூ எந்த பூ தெரியுமா. செம்பருத்தி பூ தாங்க. நிறைய பேர் வீட்டு வாசலிலேயே இந்த பூக்கள் பூத்து இருக்கும். ஆனால் இதை பறித்து சாமிக்கு போட வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வராது.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு நிறைய செம்பருத்தி பூக்களை எடுத்துச் செல்லுங்கள். செம்பருத்தி பூக்களால் அப்படியே அம்மனுக்கு அலங்காரம் செய்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டால், நாம் வைக்கும் வேண்டுதல் உடனே பலிக்கும். எதிரியின் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நம்மை விட்டு தூர விலகி விடும். சிவப்பு ஒற்றை செம்பருத்தி பூவையும் வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். சிவப்பு அடுக்கு செம்பருத்தி பூவையும் வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

துர்க்கை அம்மன், அங்காளம்மன், மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன் என்று எந்த அம்மனுக்கு சிவப்பு நிற செம்பருத்திப் பூவை சூட்டினாலும் ரொம்ப ரொம்ப நல்லது. அம்பாளின் ஆசிர்வாதம் நமக்கு முழுமையாக கிடைக்கும். குறிப்பாக வரக்கூடிய ஆடி மாதத்தில் இந்த செம்பருத்தி பூவையும் வேப்ப இலையையும் சேர்த்து மாலையாக கட்டி, அம்பாளுக்கு சாத்தி வேண்டிக்கொண்டால் உங்களுடைய வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். வீட்டில் இருப்பவர்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

உங்களுக்கு தினமும் செம்பருத்தி பூ கிடைக்கும் என்றால் அந்த பூவை கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திரு உருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு உங்களுடைய வேண்டுதலை வைத்தால், நீங்கள் என்ன வேண்டுதல் வைக்கிறீர்களோ அது உடனே நடக்கும். உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டி, கெட்ட சக்தி பிரச்சனைகள் இருந்தால் அதுவும் உங்கள் வீட்டை விட்டு தூர விலகிச் சென்று விடும்.

அரச மரத்தடி விநாயகருக்கு செம்பருத்தி பூவை வைத்துவிட்டு அரச மரத்தை மூன்று முறை வளம் வந்து வேண்டுதலை வையுங்கள். உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சுபகாரியத் தடை விலகும். உதாரணத்திற்கு உங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். திருமணம் பேச்சை பேசுவதற்காக பெண் பார்க்கவோ மாப்பிள்ளை பார்க்கவோ செல்ல போகிறீர்கள். அந்த நல்ல காரியத்திற்கு கிளம்புவதற்கு முன்பு அரச மரத்தடி விநாயகருக்கு செம்பருத்தி பூவை சாத்தி மூன்று தோப்பு கரணம் போட்டுவிட்டு, அதன் பின்பு சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் அந்த காரியம் எந்த ஒரு தடையில்லாமல் நல்லபடியாக நடந்து முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் உங்களால் முடிந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -