எதிரிகளின் வன்மம் நீங்க நிலை வாசலில் வசம்புடன் இதை சேர்த்து கட்டுங்கள்.

nilai-vasal-vasambhu
ethiri thoolai neenga
- Advertisement -

இன்றைய காலக்கட்டம் மிகவும் மோசமானதாக தான் உள்ளது. சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை எல்லாம் அறியவே முடியாது. நம்முடனே பழகிக் கொண்டு நமக்கே குழிப்பறிக்கும் ஆட்களுடன் தான் இன்று நாம் பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. அதற்காக நாம் யாரிடமும் பழகாமல் இருக்க முடியாது. என்ன இவர்களிடமிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நிலை வாசல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் தான் அதற்கு தலைவாசல், ராஜவாசல் என்று அத்தனை பெருமைகள் உண்டு. எந்த ஒரு நல்லதும், கெட்டதும் அந்த நிலை வாசலை தாண்டி தான் உள்ளே வர வேண்டும். ஆகையால் தான் நம்முடைய வழக்கத்தில் நிலை வாசலையும் தெய்வமாக பாவித்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபாராதனை காட்டி வணங்கி வருகிறோம்.

- Advertisement -

இவையெல்லாம் செய்தாலும் கூட, நம்முடைய நேரங்கள் சரியில்லாத சமயத்தில் சில இன்னல்களை நாம் சந்தித்தே ஆக வேண்டும். அது போன்ற சமயத்தில் நம்மை நாம் காத்துக் கொள்ள ஆன்மீகம் சில வழிமுறைகளை நமக்கு தந்திருக்கிறது. அதில் ஒன்றான நிலை வாசல் பரிகாரத்தை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இது எதிரிகளின் தொல்லைகள் மட்டுமல்ல கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவை கூட நம்மை அண்டாமல் காக்கும்.

எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட

இதற்கு பச்சை நிறத்தில் ஒரு துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு வசம்பு, கொஞ்சம் பச்சை கற்பூரம், படிகாரம், ஒரு துண்டு வேப்பங்கட்டை தேவை. இதற்கு வேப்பங்கொட்டை கிடைக்காத பட்சத்தில் வேப்ப இலை அல்லது வேப்பம் பொடி போன்றவை கூட பயன்படுத்தலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆகையால் மேற்கூறிய பொருட்களை எல்லாம் வாங்கி பச்சை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி விடுங்கள். இதை நிலை வாசலில் வெளிப்புறம் கட்டி விடுங்கள் போதும். ஒரு வேளை நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறீர்கள் வெளியில் கட்ட முடியாது என்ற வீட்டின் நிலை வாசலுக்கு உட்புறம் கட்டலாம்.

இந்த முடிச்சிக்கு நீங்கள் பூஜை செய்யும் போது தூபம் மட்டும் காட்டுங்கள். இந்த முடிச்சை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். இதன் பிறகு உங்கள் வீட்டிற்குள் நுழைப்பவர் தீய எண்ணத்துடன் வந்தால் அந்த எண்ணம் கூட உங்களை தாக்காது. ஏன் அவருடைய மனநிலையே கூட மாறி விடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சுக்கிரன் அருள் பெற்று பணவரவை அதிகரிக்க பரிகாரம்

அதுமட்டுமின்றி வீட்டில் இருக்கும் நம்முடைய எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் நீங்கி நேர்மறையாக செயல்பட்டு, நம் குடும்பமும் நல்ல முறையில் நிம்மதியாக வாழ இந்த பரிகார முடிச்சு துணை புரியும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -