சுக்கிரன் அருள் பெற்று பணவரவை அதிகரிக்க பரிகாரம்

sukuran elekkai cash
- Advertisement -

பண வரவை தாராளமாகவும் நம்முடைய பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ளவும் சுக்கிர பகவானுடைய அருள் மிகவும் முக்கியம். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் அல்லது நீச்சம் அடைந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலை மட்டுமின்றி எந்த வகையிலும் முன்னேற்றம் இல்லாது போய் விடும்.

அந்த வகையில் 2 ஏலக்காவை வைத்து ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷத்தையும் சுக்கிர நீச்சத்தையும் நம்மால் சரி செய்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதையும் அந்தப் பரிகாரத்தை எந்த நாளில் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சுக்கிரன் பகவான் பலம் பெற

இது மிக மிக எளிய பரிகாரம் தான். ஆனால் இதை செய்யும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை இரண்டு வழிகளில் செய்ய வேண்டும். அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில் செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு, ஏலக்காயிலே பெரிய ஏலக்காய் இருக்கும். அது கொஞ்சம் கருப்பு நிறத்தில் அளவில் பெரியதாக இருக்கும் அதை வாங்கி கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த இரண்டு ஏலக்காயை சேர்த்து தண்ணீர் பாதி அளவு சுண்டும் வரும் வரை கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இதை வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் நம்முடைய சுக்கிர தோஷம் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இல்லாமல் போவது அனைத்தும் சரியாவதுடன், வீட்டில் இருக்கும் குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

ஒருவருடைய முகம் பொலிவடைந்து தேஜஸ் உடன் காணப்படுவதற்கும் சுக்கிர யோகம் தேவை. அதுமட்டுமின்றி அவர்கள் எடுக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடக்கவும், சமூகத்தில் ஒரு மதிப்பான நிலைக்கு வர கூடிய அனைத்து யோகங்களையும் தரக் கூடியது சுக்கிர பகவான் தான். இந்த பரிகாரத்தை செய்யும் போது இவையெல்லாம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்த பரிகாரத்தையும் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய் ஐந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை நாம் பணம் வைக்கும் மணி பரிசில் வைக்க வேண்டும். இந்த ஏலக்காயும் வெள்ளிக்கிழமை தோறும் மாற்ற வேண்டும். இதை மாற்றும் போது பழைய ஏலக்காவை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இந்த பரிகாரமானது பணவரவை அதிகரிக்கக் கூடியது. ஏலக்காய் சுக்கிர பகவானுக்குரிய பொருள். அந்த பொருள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும். ஆகையால் உங்கள் பரிசில் எப்போதும் பணம் இருக்க கூடிய யோகத்தை உருவாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வியாபாரத்தில் வெற்றி பெற பைரவர் வழிபாடு.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன அடையலாம் என்ற இந்த கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -