கண்ணுக்குத் தெரியாத எதிரியை கூட கண் காண தூரத்திற்கு விரட்டி அடிக்க ஒரே ஒரு வெற்றிலையை இப்படி செய்து உங்க பக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள் போதும்.

kulatheivam betel leaf
- Advertisement -

இப்போதெல்லாம் நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நிச்சயமாக எல்லோருக்கும் எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் நாம் கண்ணுக்குத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நம் கூடவே இருந்து கொண்டு நமக்கு நல்லது செய்வது போல கூட இருந்து குழிப்பரிக்கும் எதிரிகள் தான் இப்போது அதிகம். இப்படியான எதிரிகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரே ஒரு வெற்றிலையை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் போதும் எதிரிகள் தொல்லை இல்லாமல் வாழலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றியை தருவதாலே இதற்கு வெற்றிலை என்று பெயர். அப்படி மகத்துவம் மிக்க இந்த வெற்றிலை வைத்து நாம் செய்யும் இந்த பரிகாரமானது எதிரிகள் நம்மை அண்ட விடாமல் செய்வதோடு நம்முடைய காரியங்கள் அனைத்தும் ஜெயம் ஆகவும் வழி செய்யும். எதிரிகளின் தீய எண்ணங்கள், தீய பார்வைகளை கூட நம்மை தாக்க விடாமல் செய்து விடுவதால் நிச்சயம் நம்மை நோக்கி வெற்றிகள் குவிய தொடங்கி விடும் என்ற எண்ணத்தோடு  இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்த நாளில் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்கு ஒரே ஒரு நல்ல முழு வெற்றிலையை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக விபூதியை வைத்து விட்டு ஒரு தர்ப்பை புல்லை நெய்யில் காட்டி எரித்து எரிந்த கங்கை விபூதியில் வைத்து வெற்றிலையை நன்றாக மடித்து கொள்ளுங்கள்.

இந்த வெற்றிலையை ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி பிறகு உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கொண்டு அதை பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள். இதை மணி பர்ஸில் கூட வைத்து கொள்ளலாம். ஆனால் இது எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்த வெற்றிலை முடிச்சு உங்களிடம் இருக்கும் பொழுது உங்கள் முன் வந்து நிற்கும் எதிரியின் மனநிலையை மாற்றி விடுவதோடு, உங்களின் எந்த ஒரு முயற்சியிலும் அவர்களின் தலையீடு இல்லாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த வெற்றிலைக்கு உண்டு.

- Advertisement -

எதிரிகளை நினைத்து நாம் கவலை பட்டுக் கொண்டே இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் நம்மால் சாதிக்கவே முடியாது. அதற்காக அவர்களை அழித்து விட வேண்டும் என்ற எண்ணமும் அறவே கூடாது அவர்களுடைய அந்த தீய எண்ணங்களை தடுத்து நாம் நம்முடைய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் அத்துடன் இதுபோன்ற எளிய தாந்த்ரீக பரிகாரங்களை செய்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த 2 தானத்தை செய்தால் ஆயுள் முழுவதும் நோய் நொடி இல்லாமல் வாழலாம். உயிர் பிரியும் தருணத்தில் கூட நமக்கு எந்த துன்பமும் வராது.

இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து எதிரிகள் தொல்லை இன்றி நிம்மதியான வாழ்க்கையை வாழ வடி தேடிக் கொள்ளலாம் என்று தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -