எதிரிகளின் தொல்லை நீங்க கடுகு தாந்திரீகம்.

ethiri
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் துன்பப்பட்டு போராடி தான் ஜெயிக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்காகவும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் யோசித்து பணி புரியவே நேரம் சரியாக இருக்கும். ஆனால் இந்த முன்னேற்றத்தை பொறுக்க முடியாத சிலர் ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இது ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சந்திக்க கூடிய பிரச்சனை தான். தன்னுடன் இருப்பவர் நல்ல நிலைமை மாறுவதை சக மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படியானவர்களின் தொல்லையிலிருந்து தப்பித்து நம்முடைய பணியை நாம் ஒழுங்காக செய்ய ஒரு எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரிகள் தொல்லை நீங்க கடுகு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு கைப்பிடி அளவு கடுகு வேண்டும். அதை நீங்கள் வீட்டில் இருந்து எடுக்காமல் புதிதாக கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு இரும்பு கடாய். இது இரண்டும் இந்த பரிகாரத்திற்கு முக்கியமானது.

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து சூடான உடன் உங்கள் கைப்பிடி நிறைய கடுகை எடுத்து அதில் போட்டு லேசாக வறுத்து விடுங்கள். கடுகு பொரிய ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இந்த கடுகை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய எதிரிகள் யாரோ அவர்கள் உங்களுடைய பக்கமே வரக் கூடாது, அவர்கள் தொல்லை இன்றி நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த கடுகை உங்கள் எதிரிகள் வீட்டு பக்கத்தில் உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே இந்த கடுகை தூவி விட்டு சென்று விடுங்கள். அவர்கள் மிதிக்க மிதிக்க உங்கள் பக்கம் வராத அளவிற்கு அவர்களுடைய மனநிலை மாறி விடும். ஒருவேளை தொலைவில் இருக்கிறார்கள் பணி செய்யும் இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அங்கு அவர்கள் கால் படும் இடத்தில் இது போல தூவி விடலாம்.

இதை எல்லோரும் செய்யலாம் ஒரு வேளை எதிரி யார் என்று தெரியாதவர்கள் இது போல கொஞ்சம் கடுகை கையில் எடுத்து சிறிது நேரம் லேசாக கைகளால் உருட்ட வேண்டும். அப்போது கடுகு ஒரு வித பளபளப்பு தன்மையாக மாறும். அதை நம்முடைய கட்டை விரல் ஆள்காட்டி இரண்டு விரலை பயன்படுத்தி எடுத்தால் கொஞ்சமாக தான் எடுக்க வரும்.

- Advertisement -

அந்த கடுகை ஒரு பேப்பரில் வைத்து மடித்து நம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் வெளியில் எங்கு சென்றாலும் கூடவே வைத்திருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிரிகள் தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் உங்கள் முன் வந்தாலும் அவர்களுடைய மனநிலை மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

எதிரிகளின் தொல்லை இன்றி நிம்மதியாக வாழ கடுகை வைத்து செய்யப்படும் இந்த எளிய தாந்த்ரீக பரிகார முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -