சண்டை வரும்போது சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் மந்திரம்

durgai2
- Advertisement -

நம்முடைய எல்லோர் வாழ்விலும் இந்த சண்டை சச்சரவுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, சண்டைகள் வரத்தான் செய்யும். வீட்டில் சொந்த பந்தங்களோடு சண்டை நடக்கும், அலுவலகத்தில் நண்பர்களோடு ரொம்பவும் தெரிந்தவர்களோடும் சண்டை நடக்கும் சில சமயம் எதிரிகளோடு சண்டை நடக்கும், அந்த சமயத்தில் எதிரி நம்மை விட பல மடங்கு பலசாலியாக இருக்கின்றான், புத்திசாலியாகவும் இருக்கின்றான்.

அவனை எதிர்த்து போராட நமக்கு மனதிலும் தெம்பு கிடையாது, உடலிலும் தெம்பு கிடையாது, அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக தப்பிக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்வது ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாடு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

எதிரிகளிடம் இருந்து தப்பிக்க துர்க்கை அம்மன் வழிபாடு

இரண்டு பேருக்கு கைகலப்பு வரும் அளவுக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டது. சண்டையில் மாட்டிக்கொண்டீர்கள். எதிராளி உங்களை பலமான ஆயுதத்தால் தாக்க வருகின்றான் என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லலாம். இறைவனின் அருளால் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வர வேண்டாம். உதாரணத்திற்காக இது சொல்லப்பட்டுள்ளது.

முதலில் இது போல சண்டை வந்த உடன் துர்க்கை அம்மனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அம்மா தாயே இந்த பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுத்தாயே என்று ஒரு பிரார்த்தனை வைத்துவிட்டு, ‘ஓம் தும் தும் தும் துர்காய நமஹ, ஓம் தும் தும் தும் துர்காய நமஹ’ என்றவாறு இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் உங்களுடைய சண்டை பெருசாகாது.

- Advertisement -

அதாவது உங்களை தாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரக்கூடிய எதிரி கூட அப்படியே மனசு மாறி சாந்தமாகி திரும்பி சென்று விடுவார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம் இது. இவ்வளவு பெரிய அளவில் சண்டை போடும்போது மந்திரத்தை சொல்ல தெரியாது என்றாலும், ‘தும் தும் தும்’ என்ற வார்த்தையை மனதில் சொல்லுங்க.

துர்க்கை அம்மனை நெனைச்சுக்கோங்க அவ்வளவுதான். பற்றி எரியும் பிரச்சனையாக இருந்தாலும் அது அப்படியே சாந்தமாக தணிந்து போய்விடும். எளிமையான மந்திரம் எளிமையான வழிபாடு ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் சக்தி மிக மிகப் பெரியது. ஒரு பஞ்சாயத்துக்கு சென்றாலும் சரி, அந்த இடத்தில் சண்டை வரும்போது நீங்க இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -

ஒரு சில பேருக்கு தைரியமே இருக்காது. ரொம்பவும் கோழையாக இருப்பார்கள். யாராவது எதிராளி கொஞ்சம் குரலை உயர்த்தி சத்தம் போட்டு பேசினாலும் பயந்து விடுவார்கள். இப்படிப்பட்ட தன்மையைக் கொண்டவர்கள் மனதில் இந்த துர்க்கை அம்மன் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் ஒரு சக்தி பிறக்கும். தைரியம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: பல தலைமுறைகளுக்கு பணத்தை சேர்க்கும் பண ஈர்ப்பு பரிகாரம்

நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த மந்திரத்தை பயன்படுத்தி பாருங்களேன் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -