எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்கும் எருக்கன் இலை பரிகாரம்! உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த இனி யாராலும் முடியாது.

erukkan
- Advertisement -

நம்முடைய முன்னேற்றத்திற்குத் தடையாக முதலில் வந்து நிற்பது எதிரிகளின் சூழ்ச்சி தான். குறிப்பாக நம் உடன் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் சிலருடைய பொறாமை குணம் தான் நம் வெற்றியை தடுத்து நிறுத்தும். எதிரி தொல்லையிலிருந்து தப்பிக்க, அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களின் சூழ்ச்சியான பார்வையிலிருந்து தப்பிக்க, நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க சுலபமான முறையில் ஒரு தார்மீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

enemy1

பொதுவாகவே நம் உடன் இருப்பவர்களுக்கு கிடைக்காத முன்னேற்றமும் அங்கீகாரமும் நமக்கு கிடைக்கும் போதே, இந்த எதிரிகளின் பிரச்சனை ஆரம்பித்துவிடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே, வாழ்க்கையில் ஒவ்வொருவரும்  இந்த கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பரிகாரத்தை இவர்கள் தான் செய்யவேண்டும். இவர்கள் செய்யக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பலன் அடையலாம். இதன்மூலம் எதிராளிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் வேண்டாம். எதிரிகள், உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

எருக்கன் இலை 3, விரலிமஞ்சள் 3, கட்டி கற்பூரம் 3, இந்த பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் வைத்து செய்ய வேண்டாம். வீட்டிற்கு வெளியில் இடம் இருந்தால் அங்கே செய்யலாம். பின்புறம் காலி இடம் இருந்தால் அங்கே செய்யலாம். பால்கனி போன்ற வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள இடத்தில் செய்யலாம். இதில் எதுவுமே இல்லை என்றால் மொட்டை மாடியில் செய்யுங்கள்.

Vellerukkam

வெளிப்புற மான இடத்தில் நீங்கள் ஒரு மனப்பலகையின் மீது, அல்லது பாயின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் முன்பு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். கையில் வைத்திருக்கும் எருக்கன் இலை, விரலி மஞ்சள், கற்பூரம், இந்த மூன்று பொருட்களையும் உங்கள் தலையை மூன்று முறை வலப்பக்கமாக சுற்றி கொள்ள வேண்டும். முதலில் மூன்று எருக்கன் இலைகளை தாம்புல தட்டில் அடுக்கி வைத்துவிட்டு, ஒவ்வொரு இலைக்கு மேல் மஞ்சள் கிழங்குகளை வைத்து, ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றிவிட வேண்டும்.

- Advertisement -

கற்பூரம் மட்டும் எரிந்து சாம்பலாகிவிடும். பக்கத்தில் இருக்கும் மஞ்சள் கிழங்கு அப்படியேதான் இருக்கும். கற்பூரம் எரிந்து சாம்பலான உடன், தாம்புல தட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒரு கவரில் கொட்டி அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களை சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

virali-manjal

அந்தப் பாதுகாப்பு வட்டமானது அடுத்தவர்களுடைய சுழற்சியையும் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியையும் அடுத்தவர்களுடைய பொறாமை குணத்தையும் உங்களிடம் நெருங்கவிடாமல் பாதுகாக்கும். குறிப்பாக இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதில் தான் சூட்சமமே அடங்கியுள்ளது. இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். நம்பிக்கையோடு செய்தால் எதிரி தொல்லையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

- Advertisement -