தினமும் இந்த கடவுளை வழிபாடு செய்தாலே போதும். எதிரிகள் என்ன சூழ்ச்சி செய்தாலும் உங்களை வீழ்த்த முடியாது. ஏவல், பில்லி, சூனியம், கூட உங்களைப் பார்த்து பயந்து நடுங்கி பின்னுக்கு ஓடும்.

murugan-om
- Advertisement -

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக இருக்கும் முருகப்பெருமானின் வழிபாடு நமக்கு முழு நன்மையை தரும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். தினம் தினம் முருகா முருகா என்ற நாமத்தை சொல்லி அன்றைய நாளை தொடங்கினாலே போதும். அந்த நாள் வெற்றிகரமான நாளாக அழகான நாளாக அமையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. எதிரிகளை விரட்ட, நம் மீது விழும் கண் திருஷையில் இருந்து தப்பிக்க, ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்ய வேண்டிய எளிமையான முருகர் வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எதிரிகளால் வரும் பிரச்சனைகளை துவம்சம் செய்ய இந்த இரண்டு வரி மந்திரம் போதும். மிகவும் எளிமையான சிறப்பு வாய்ந்த முருகர் மந்திரத்தை பற்றி பதிவுக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

எதிரிகளை விரட்ட முருகர் மந்திரம்:
மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய எதிரிகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எப்போது நினைக்கின்றோமோ, அப்போதே நாம் ஜெயித்து விடுவோம். நமக்கு வேறொருவர் எதிரியாக இருப்பார்கள். நாம் இன்னொருவனுக்கு எதிரியாக இருப்போம். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். இயல்பாக நடக்கக்கூடிய விஷயமும் கூட.

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நிச்சயம் வாழ முடியாது. ஆக எதிரிகளும் மனிதர்கள் தான். எதிரிகளுக்கும் குடும்பம் இருக்கிறது. எதிரிகள் அழிந்து போகக்கூடாது என்ற எண்ணத்தை மனதில் விதைத்து, எதிரிகளோடு போட்டி போடும் தெம்பைப் பெற எதிரிகளோடு போட்டி போட்டு ஜெயிப்பதற்கு மன தைரியத்தை பெற முருகப்பெருமானை வழிபாடு செய்வோம்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து முருகப்பெருமானை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறைக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

‘ஓம் நமோ பகவதே
சரவணபவாய, சண்முகாய, சுப்ரமணியாய, குகாய நமக!

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கு கணக்கு எல்லாம் எதுவும் கிடையாது. இந்த மந்திரத்தை தினமும் நீங்கள் உச்சரிக்க உச்சரிக்க உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் பிரச்சனை வராது. சில பேருக்கு கண் திருஷ்டியின் மூலமாக வாழ்க்கையில் சில இழப்புகள் ஏற்படும். அந்த இழப்புகளை சரி கட்டவும் இந்த மந்திரம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், வீட்டில் தாராளமாக செல்வ வளம் பெருகவும் ஒரு டம்ளர் பாலை இப்படி வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

நிறைய பேர் வீட்டில் எதிர்மறை சக்தி உள்ளது. செய்வினை செய்து வைத்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் குடும்பத்தோடு பூஜை அறையில் அமர்ந்து சத்தம் எழுப்பி இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் துரத்தி அடிக்கப்படும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான மந்திரத்தை சொல்லி முருகப்பெருமானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -