பிறந்த நட்சத்திரத்தை வைத்து முன்னோர்கள் சாபம் நம் குடும்பத்திற்கு இருக்குதா என்பதை கண்டுபிடிக்க எளிமையான வழிகள்

sabam
- Advertisement -

முன்னோர்கள் சாபம் என்றால் என்ன. நமக்கு முன்னாள் பிறந்து இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் காரியங்களை சரியாக செய்யாமல் விட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனையை தான் முன்னோர்களின் சாபம் என்று சொல்லுவார்கள். இந்த முன்னோர்களின் சாபம் நம்முடைய குடும்பத்திற்கு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. ஜோதிடத்தில் இதற்கு சில சூட்சமமான விதிமுறைகளை சொல்லி வைத்துள்ளார்கள்.

இந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் உங்களுடைய குடும்பத்தில் இருந்தால், உங்களுடைய குடும்பத்திற்கு முன்னோர்கள் சாபம் இருப்பதாக நீங்களே தெரிந்து கொள்ளலாம். அந்த மூன்று நட்சத்திரம் என்னென்ன. முன்னோர்கள் சாபம் ஏற்பட, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் அப்படி என்னதான் தவறு செஞ்சிருப்பாங்க, தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முன்னோர்கள் சாபத்தை கண்டுபிடிக்க வழிமுறைகள்

பூசம், விசாகம், சதயம், மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த நான்கு பேர் உங்களுடைய வீட்டில் இருந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் முன்னோர்களின் சாபம் இருக்கிறது என்று அர்த்தம். அதாவது இந்த நான்கில் ஏதாவது ஒரு நட்சத்திரம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் சாபம் இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முன்னோர்கள் சாபம் எப்படி வருகிறது. என்னுடைய அப்பாவும், அவர்களுடைய அப்பா அம்மாவுக்கு கரெக்டாக திதி தர்ப்பணம் செய்தார்கள். நானும் என்னுடைய மறைந்த அப்பா அம்மாவுக்கு சரியாக திதி தர்ப்பணம் செய்கின்றேன். இருந்தும் முன்னோர்கள் சாபம் வர என்ன காரணம். உங்களுடைய அப்பாவிற்கு உடன்பிறந்தவர்கள், சிறு வயதிலேயே இருந்திருந்தால் அவர்களை நினைத்து நீங்கள் வழிபாடு செய்கிறீர்களா. அவர்களுக்கு நீங்கள் திதி தர்ப்பணம் கொடுக்கிறீர்களா என்று பாருங்கள்.

- Advertisement -

இவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கவில்லை என்றாலும் இதன் மூலமாகவும் முன்னோர்களின் சாபம் வரும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய அப்பாவின் உடன் பிறந்தவர்கள், பிறந்த உடனேயே இருந்திருக்கலாம். பிறந்து ஒரு வருடம் கழித்து இருந்திருக்கலாம். அல்லது 10 வயதில், 12 வயதில் விபத்தில் மரணம் அடைந்திருக்கலாம்.

அதாவது திருமணமாவதற்கு முன்பே இருந்திருக்கலாம். திருமணம் ஆகி வாரிசு இல்லாமல். அல்லது தற்கொலை செய்து இருந்திருக்கலாம். அவர்களுக்கு வாரிசு இல்லை. இப்போது அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க யாருமே கிடையாது. அவர்களுடைய ஏக்கம் யார் மீது திரும்பும். தன்னுடைய உடன் பிறந்தவர்களின் குழந்தைகள் மீது தான் இருக்கும்.

- Advertisement -

இப்படியாக உங்களுடைய அப்பாவோடு பிறந்தவர்கள் யாரேனும் சிறுவயதில் இருந்திருந்தால், அவர்களின் நினைத்து நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும். திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய அப்பாவுக்கு உடன் பிறந்தவர்கள் என்றால் பெரியப்பா, சித்தப்பா, என்ற முறை உங்களுக்கு வரும். பெண் பிள்ளைகள் பிறந்து இருந்திருந்தால் அத்தை என்ற முறையில் வரும்.

அவர்களுக்கு முறையான திதி தர்ப்பண வழிபாடுகளை நீங்கள் தான் எடுத்து செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளை நீங்கள் தவறவிட்டாலும் உங்களுடைய குடும்பத்திற்கு முன்னோர்கள் சாபம் இருக்கும் என்பது ஜோதிடத்தால் சொல்லப்பட்டுள்ள ஒரு உண்மை. உங்களுடைய குடும்பத்தில் யாராவது இப்படி சிறுவயதிலேயே இருந்திருக்கிறார்களா என்பதை, உங்களுடைய முன்னோர்களை கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

அவர்களுக்கு செய்யக்கூடிய திதி தரப்பன காரியங்களை சரியாக செய்தால் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு முன்னோர்களின் சாபம் இருக்காது. அவர்களின் நினைத்து வழிபாடு செய்து திதி தர்ப்பணம் கொடுத்து விட்டால் அவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிடும். உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்பதும் உண்மை. ஜோதிடம் சார்ந்த இந்த வழிபாடு முறைகளில் பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -