இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால், தினம் தினம் பணம் பார்க்கலாம். அது மட்டும் இல்லைங்க, எதிரிகள் நம்மை பார்த்தால் எட்டடி தூரத்திற்கு எகிறி ஓடி விடுவார்கள்.

thilagam
- Advertisement -

சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்று ஒரு தனியான எதிரி கூட்டமும், பிரச்சனைகளும் இருக்கும். அவைகளை எல்லாம் சமாளித்து வருமானத்தை ஈட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தொழிலில் வரும் எதிரிகளை சமாளித்து, கூட வேலை செய்பவர்களை சமாளித்து, மேலதிகாரிகளை சமாளித்து, பல வகையான பிரச்சனைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி வாழ்க்கையை வாழ்கின்றோம். இப்படி பலவிதமான பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், அதேசமயம் வருமானத்தில் எந்த தடையும் வராமல் இருக்கவும், நாம் நெற்றியில் இந்த திலகத்தை வைத்துக் கொண்டாலே போதும். வருமானத்துக்கு வழி வகுத்து, எதிரிகளை எட்டடி தூரம் ஓட வைக்கக்கூடிய அந்த திலகம் எந்த திலகம். இதோ உங்களுக்கான பதிவு.

எதிரி தொல்லையை சமாளிக்க, வருமானத்தை அதிகரிக்க நெற்றியில் வைக்க வேண்டிய திலகம்:
இந்த திலகம் தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் தேவை. இலவங்கம், கசகசா, பன்னீர். லவங்கத்தையும், கசகசாவையும் சிறிது நேரம் பன்னீரில் ஊற வைத்து அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து விழுதாக்கி இந்த திலகத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளாம். இதை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து, இந்த திலகத்திற்கு ஒரு சக்தியூட்டி அதன் பின்பு தினமும் இந்த திலகத்தை வெளியில் செல்லும்போது நெற்றியில் இட்டுச் சென்றால் நீங்கள் செல்லும் காரியம் ஜெயம்.

- Advertisement -

இப்படி விழுதாக அரைக்க முடியாது என்றால், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, அந்த பொடியோடு கொஞ்சம் பன்னீர் ஊற்றி குழைத்து அதை நெற்றியில் வைத்துக் கொண்டாலும் நன்மையே.

உங்களை தினம் தினம் எதிராக பார்த்தவன் கூட நண்பனாக மாறி விடுவான். உங்களுடன் நட்புறவு பழக பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு தொல்லை கொடுக்காமல், உங்களை விட்டு ஒதுங்கி விடுவான். உங்களுக்கு கெடுதல் நினைக்க மாட்டான். தொழிலில் வந்த இடர்பாடுகள் எல்லாம் சரியாகி தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்ட தொடங்கி விடுவார்கள். பாதகமான போன விஷயங்கள் எல்லாம், உங்களுக்கு சாதகமாக அமையும். அவ்வளவு வசிய தன்மை கொண்ட திலகம் தான் இது.

- Advertisement -

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். குழந்தைகள் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு போனால், சக மாணவர்களோடு சண்டை சச்சரவு வராது. தேர்வை நல்லபடியாக எழுதவும் இந்த திலகம் உங்களுக்கு உதவியாக இருக்கும். சாதாரணமாக பொட்டிட்டு இட்டு கொண்டு, அதன் மேலே இந்த திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். விபூதி குங்குமம் வைப்பது போல தான். நெற்றியில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் இந்த திலகத்தை சிறிதளவு உச்சந்தலையில் தடவிக் கொண்டாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தை படாய் படுத்தும் ஜென்ம தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு எளிய வழிமுறையை கடைப்பிடித்தால் போதும். தரித்திரம் நீங்கி மகிழ்ச்சியாய் வாழ சுலபமான வழி.

எல்லா விதத்திலும் உங்களுக்கு லாபத்தை கொடுக்க கூடிய ஆன்மீகம் சொல்லும் இந்த வசிய திலக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -