உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலகி ஓட இந்த இரண்டு பொருட்கள் போதும்

உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலகி ஓட இந்த இரண்டு பொருட்கள் போதும்
- Advertisement -

கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது பெரியோர் வாக்கு. அதாவது கல்லினால் படும் அடி ஓரிரு நாட்களில் ஆறிவிடும். ஆனால் கண்ணடி என்பது உங்களைவிட்டு விலகாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவேதான் வீடுகளில் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் திருஷ்டி சுற்றி போட வேண்டும் என்பார்கள். ஒருவருடைய தீய சிந்தனைகளும் கெட்ட எண்ணங்களின் தாக்குதலும் தான் மற்றவருக்கு திருஷ்டியாக மாறுகிறது.

kan-thirusti

உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் திருஷ்டி அல்லது தோஷம் ஏற்பட்டிருந்தால் அதனை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஏதாவது பிரச்சனைகள், சண்டைசச்சரவுகள், பிரிவுகள், தொழிலில் நஷ்டம், பொருள் இழப்பு, உடல்நலக்குறைவு, தடைகள், சோகங்கள் இவ்வாறு ஏதேனும் ஒன்று வந்துகொண்டே இருக்கும்

- Advertisement -

அப்பாடி! ஒரு பிரச்சனை தீர்ந்ததடா சாமி! என்று நினைப்பதற்குள் மற்றொரு பிரச்சனை பூதாகரமாக தோன்றிவிடும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனசோர்வு, தேவையில்லாதவற்றை கற்பனை செய்தல், கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்படுதல், கெட்ட கனவுகள் வருவது, தூக்கமின்மை, மற்றவர்கள் மீது எரிந்து விழுதல், சந்தேகம், பகைமை உண்டாதல் இவ்வாறான எதிர்மறை எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

poramai

கண்திருஷ்டி ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமாகன காரணம் உங்களை சுற்றியிருப்பவர்களுல் ஒருவர் எதிர்பார்த்துகொண்டிருப்பது அவர்களுக்கு கிடைக்காமல் உங்களுக்கு கிடைக்கும்பொழுதும் அதனால் நீங்கள் பயன் அடையும் பொழுதும் தான் உண்டாகிறது. அவர்களுக்கு இது மன உளைச்சலையும், பொறாமை எண்ணத்தையும் வெளிப்படுத்தி இதன் மூலம் உண்டாகும் எதிர்மறை ஆற்றளே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

உங்கள் கூடவே இருந்து குழி பறிப்பவர்கள், துரோகிகள், எதிரிகள், பொறாமை படுபவர்கள், தீங்கிழைப்பவர்கள் இதுபோன்றவர்களை உங்களைவிட்டு விலகி தலைதெறிக்க ஓடவைப்பதற்கு இந்த இரண்டு பொருட்களை பேப்பரில் வைத்து எரித்தால் மட்டும் போதும்.

fire

இந்த பரிகாரத்தை செய்வதற்கு தேவைப்படும் முக்கியமான பொருள் வெண்கடுகு. இந்த வெண்கடுகிற்கு தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது. இவை நெருப்பில் எரிந்து வெடிக்கும்பொழுது உங்கள் எதிரிகளின் எண்ணங்களும் அவ்வாறே வெடித்து சிதறிவிடும்.

பரிகாரம் செய்யும் முறை:
ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுக்கு தீங்கிழைக்கும் எதிரியின் பெயரை எழுதிக்கொண்டு, அதன்மீது சிறிதளவு வெண்கடுகை வைத்து நான்காக மடித்து கொண்டு, வீட்டின் வாசலில் நடுப்பகுதியில் நின்றுகொண்டு, அந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு, அதன்மீது ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றிவிடவேண்டும். பேப்பர் எரிந்து அதனுள் இருக்கும் வெண்கடுகு நன்றாக வெடித்து சிதறிவிடும்.

venkadugu

எதிரிகளை விரட்ட இந்த வலிமை வாய்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்கள் பக்கமே திரும்பி பார்க்க மாட்டார்கள். உங்களைப்பற்றிய எந்த விதமான தீய சிந்தனையும் அவர்களுக்கு இருக்காது. திருஷ்டியினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களை விட்டு விலகிவிடும். அதன் பிறகு குடும்பத்தில் அமைதி நிலவி தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தடைகள் நீங்கி நீங்கள் நினைப்பது எல்லாம் நடந்தேறும்.

- Advertisement -