எதிரி தொல்லை நீங்க பரிகாரம்

guru
- Advertisement -

மனித ரூபத்தில் இருப்பவர்கள்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சில மனிதர்களிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக இருப்பார்கள், அதேபோல நம் கண்ணுக்கு புலப்படாத கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினையும், நம்மை தோற்கடிக்க கூடிய எதிரிகள் தான்.

இப்படி கண்ணுக்குத் தெரியாத இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றாலும் சரி, கண்ணுக்குத் தெரிந்த மனித ரூபத்தில் நடமாடும் எதிரிகளாக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து தப்பிக்க என்ன செய்வது ஆன்மிகம் சார்ந்த வழிபாட்டு முறைகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வியாழக்கிழமை பரிகாரம் இதோ உங்களுக்காக

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள். வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய். இரண்டு எண்ணெயையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கண்ணாடி பௌலில் இரண்டு எண்ணெயையும் சம அளவில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். ஒரு குழி கரண்டியில் வேப்ப எண்ணெயில் 1 கரண்டி, கடுகு எண்ணெயில் 1 கரண்டி, எடுத்து அந்த கண்ணாடி பவுலில் ஊற்றி கலந்து உங்களுடைய வரவேற்பு அறையில் சிறிது நேரம் வைத்து விடுங்கள்.

நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பாக வியாழக்கிழமை காலையிலேயே எழுந்த உடனேயே பல் தேய்த்து விட்டு இந்த பரிகாரத்தை செய்யவும். காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை ஒரு மணி நேரம் இந்த எண்ணெய் திறந்தபடி உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் இருக்கட்டும். இதற்குள் உங்களுடைய உள்ளங்கைகளில் 2 சொட்டு வேப்ப எண்ணெய், 2 சொட்டு கடுகு எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து உங்களுடைய முகம் கை கால் உடம்பில் லேசாக பூசிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

உடம்பில் மேல் பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வரை பூசிக்கொண்டு சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். இதற்குள் வரவேற்பறையில் எண்ணெய் வைத்து 1 மணி நேரம் ஆகி இருக்கும் அல்லவா. இந்த எண்ணெயை கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் சாக்கடையில் கொட்டி விட வேண்டும். அடுத்தவர்கள் இந்த எண்ணெயை தாண்டக்கூடாது. மிதிக்கக் கூடாது.

அது போல ஒரு இடத்தில் இந்த எண்ணெயை கொட்டி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் இந்த எண்ணெயின் மூலம் வெளியே சென்று விடும். உங்கள் உடம்பை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றலும் இந்த எண்ணெயின் மூலம் வெளியே சென்று விடும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் விலகிவிடுவார்கள். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் விலகவும் இந்த பரிகாரம் நல்லபடியாக வேலை செய்யும். உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்குதோ, அதை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். தொடர்ந்து மூன்று வியாழக்கிழமை இதை செய்தால் கண்ணுக்குத் தெரியாத எந்த எதிர்மறை ஆற்றலாலும் உங்களை தோற்கடிக்கவே முடியாது.

இதையும் படிக்கலாமே: சக்தி வாய்ந்த வாராஹி வழிபாடு

இதே போல பரிகாரத்தை நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். இதனால் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் விலகும் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். பரிகாரம் இவ்வளவு தான். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெரலாம்.

- Advertisement -