சக்தி வாய்ந்த வாராஹி வழிபாடு

varahi
- Advertisement -

கூப்பிட்டு குரலுக்கு ஓடோடி வரக்கூடிய குழந்தை உள்ளம் கொண்டவள் வாராஹி. ஆனால் எல்லோரும் இவளை உக்கிர தெய்வம் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா. வராகிக்கு என்று ஒரு சுபாவம் இருக்கிறது. வாராகியின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்து விட்டு, அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக வழிபாட்டை நீங்கள் செய்து விட்டால், அது ரொம்ப ரொம்ப தவறு.

அடுத்தவர்களை அழிக்க வேண்டும், எதிரிகள் ஒழிய வேண்டும் என்று வாராகி இடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் உங்களுக்கு எதிராக திரும்பி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. கெட்ட எண்ணத்தோடு எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாராகியை ஒருபோதும் ஒரு நொடியும் கும்பிட்டு விடக்கூடாது. அந்த சமயம் வாராகிக்கு உக்கிரமான கோபம் வெளிவந்துவிடும். அந்தக் கோபம் சாதாரணது கிடையாது. ரொம்ப ரொம்ப உக்கிரமானது.

- Advertisement -

அப்படிப்பட்ட தெய்வத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்போது நாம் அறியாமல் சிறு தவறு செய்து விட்டாலும் அது நம்முடைய குடும்பத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் வாராஹியை வீட்டில் வைத்து வழிபாடு செய்யாதீர்கள் என்று சில பேரால் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு இப்ப உங்க வீட்ல வாராகியின் திருவுருவப்படம் அல்லது சிலை இருக்கிறது. 10 நாள் தொடர்ந்து அந்த வாராஹிக்கு செய்ய வேண்டிய பூஜையை செய்து விட்டீர்கள். பதினோராவது நாள் பூஜை செய்ய வில்லை என்றால் அது தவறு. தினமும் வாராகிக்கு செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களை சரியாக செய்ய வேண்டும்.

- Advertisement -

அதேபோல இன்று மாலை 7:00 மணிக்கு வாராகியை நீங்கள் பூஜை செய்தால், தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் அதே 7:00 மணிக்கு அவளுக்கு விளக்கு ஏற்றி நிவேதியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அது நம்மால் செய்ய முடியுமா. இன்றைய பரபரப்பான உலகத்தில் எல்லோரும் பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கின்றோம். பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றுவதே பெரிய கஷ்டமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழலில் இந்த வாராஹிக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை தவறிவிட்டால் என்ன செய்வது. இதனால் தான் வாராகியை வீட்டில் வைத்து வழிபாடு செய்யாதீங்க அப்படின்னு முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். உங்களால் முடியும். வாராகித் தாயை சரியான முறையில் பூஜை செய்து வழிபாடு செய்ய முடியும் என்பவர்கள் வாராகி வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

வராகிய கும்பிடும் போது எதிரி தொல்லை நீங்க வேண்டும் என்றால், அந்த எதிரியை பற்றி வாராகியிடம் சொல்லலாம். அந்த எதிரியிடமிருந்து என்னை காப்பாற்று என்று வேண்டுதல் வைக்கலாம். அந்த எதிரி அழிந்து போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வாராகிதாய் முன்பு கொண்டு போக கூடாது. மனிதனுடைய மனசு நிலையானது அல்ல, ஒரு நாள் இருப்பது போல அடுத்த நாள் இருக்க மாட்டோம். ஏதோ ஒரு கோபத்தில் எதிரி பேரைச் சொல்லி, அவன் அழிந்து போகட்டும் என்று தவறுதலாக கூட வாராயோ கும்பிடக் கூடாது.

சரிங்க, எங்க வீட்ல வாராகி திருவுருவப்படம் இல்லை. சிலை இல்லை. ஆனால் எங்களுக்கு அந்த வாராகியின் அருள் ஆசி கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் பூஜை எப்படி செய்வது. வழக்கம் போல மாலை 6:00 மணிக்கு மேல் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றுங்கள்.

அந்த தீபச்சுடர் தான் வாராகி என்று மனதார நம்புங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் மாதுளம் முத்துக்களை போட்டு பிரசாதமாக வையுங்க. பிறகு பூஜை அறையில் அமர்ந்து ‘ஓம் வம் வாராஹியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுடைய வேண்டுதலை அந்த வாராஹித் தாயின் பாதங்களில் இறக்கி வையுங்கள். அடுத்த நாளே உங்கள் கஷ்டங்கள் நிச்சயம் தீரும்.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உங்களுடைய இந்த பூஜை நம்பிக்கையோடு உண்மையாக இருந்தால். வராகியை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து விட்டேன் என் பிரச்சனை இன்றோடு முடிந்தது என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போ நிச்சயமா வாராகி உங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பாள். வராகியை வழிபாடு செய்வது இவ்வளவுதாங்க.

இதையும் படிக்கலாமே: காரடையான் நோன்பு அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

வாராகியின் திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இல்லை என்றால் மேல் சொன்ன இந்த சுலபமான வழிபாடே போதும். இந்த வழிபாட்டை தினமும் செய்ய வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை மாதத்தில் ஒரு நாள் பஞ்சமி திதி அன்று செய்தால் கூட போதும். உங்களுக்கு வாராஹி ஆசீர்வாதம் கிடைக்கும். கண் திருஷ்டி விழாது. செய்வினை கோளாறால் பிரச்சனை வராது. எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். வறுமை வீட்டில் இருந்து ஓடியே போயிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -