வீட்டிற்குள் வந்தாலே நிம்மதியற்ற நிலை ஏற்படுகிறதா? சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கிறதா? இந்த ஒரு பொருளை வீட்டில் தூவினாலே போதும் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி ஓடிவிடும்.

venkaduku
- Advertisement -

கோவிலுக்கு சென்றால் மனம் நிம்மதி பெறும். எந்த அளவுக்கு மனம் நிம்மதி பெறுகிறதோ அந்த அளவிற்கு நாம் நம்முடைய வீட்டிற்கு சென்றாலும் நிம்மதி பெற வேண்டும். அப்படி நிம்மதி கிடைத்தால் தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. அதை தவிர்த்து விட்டு வெளியில் இருக்கும் வரை சந்தோஷமாக இருப்பவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு சாதாரண பிரச்சனைக்காக சண்டை போட்டு நிம்மதி இன்றி இருந்தால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதாக உணரப்படுகிறது. இப்படி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு எந்த பொருளை பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள், கண் திருஷ்டிகள் என்று நம்முடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு பல இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று நம் வீட்டில் இருந்தால் நம் வீட்டில் இருக்கக் கூடிய சந்தோஷமும், நிம்மதியும் தொலைந்து போய்விடும். காரணமே இல்லாமல் சண்டைகள் ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். வீண் விரையங்களால் பண செலவுகள் ஏற்படும். பணம் நம் கையில் தங்கவே தங்காது. இவ்வளவு இடையூறுகளையும் தரக்கூடிய இந்த எதிர்மறை ஆற்றல்களை நாம் விலக்காமல் விட்டால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

இந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் எளிமையான பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று வெண்கடுகு, மற்றொன்று குங்கிலியம். இவை இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் சுத்தம் செய்வதற்கென்று நாம் ஒரு நாளை ஒதுக்கி வைத்திருப்போம். அந்த நாளுக்கு முந்தைய நாள் வீடு முழுவதும் வெண்கடுகை தூவி விட வேண்டும். தனி வீடாக இருப்பின் வீட்டை சுற்றியும் தூவி விட வேண்டும்.

24 மணி நேரம் அந்த வெண்கடுகு நம் வீட்டிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் இந்த வெண்கடுகு உட்கிரகித்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து தூவிய வெண்கடுகு அனைத்தையும் பெருக்கி அள்ளிக் கொள்ள வேண்டும். மூன்று முக்கு சந்திக்கும் தெருவில் உங்களுக்கு இடது பக்கமாக போட்டு விட வேண்டும். அல்லது ஓடுகின்ற நீரில் போட்டு விடலாம். இவ்வாறு போட்டுவிட்டு வீட்டிற்குள் வருவதற்கு முன் கை, கால்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டை துடைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் கோமியம், சிறிது பன்னீர், சிறிது கல் உப்பு, சிறிது மஞ்சள் தூள் இவை அனைத்தையும் போட்டு தேவையான அளவு நீரையும் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வேப்ப இலைகளையும் அல்லது மா இலைகளையோ அதனுள் போட்டு வீட்டு வாசலில் இருந்து வீடு முழுக்கவும் தெளித்து விட வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் நபர்களில் தலையிலும் இந்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்து இடங்களிலும் இந்த தீர்த்தத்தை தெளித்த பிறகு சாம்பிராணி தூபம் போட வேண்டும். அவ்வாறு சாம்பிராணி தூபம் போடும் பொழுது நாம் வாங்கி வைத்திருக்கும் குங்கிலியத்தில் சிறிதளவு போட்டு வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும். இப்படி காட்டுவதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் நம் வீட்டிற்குள் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: எந்த வேலையும் கிடைக்கவில்லையா? கிடைத்த வேலையில் பிரமோஷன் இல்லையா? அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லையா? சூரிய பகவானை இந்த முறையில் வழிபட்டால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

இந்த பரிகாரத்தை நாம் நம் வீட்டில் வாரந்தோறும் செய்து வந்தால் எதிர்மறை ஆற்றல்கள் விலகி விட்டு நேர்மறை ஆற்றல்கள் நிரம்பிய கோவிலாக வீடு திகழும். இந்த பரிகாரத்தை நாம் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் செய்யலாம்.

- Advertisement -