எந்த வேலையும் கிடைக்கவில்லையா? கிடைத்த வேலையில் பிரமோஷன் இல்லையா? அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லையா? சூரிய பகவானை இந்த முறையில் வழிபட்டால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

job
- Advertisement -

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் நபர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி பல போட்டி தேர்வுகளை எழுதியும் அதில் வெற்றி கிடைக்காமல் முயற்சித்துக் கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடியவராக திகழக் கூடியவர் தான் சூரிய பகவான். வேலை தொடர்பான பிரச்சனை தீர சூரிய பகவானை எளிய முறையில் எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவரை நாம் அடையாளப்படுத்தும் பொழுது நம்மை அறியாமலேயே அவர்களுடைய வேலையை அடையாளமாக கூறிவிடுவோம். வேலை செய்யும் அந்த நபருக்கு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்திற்கே அந்த வேலையை ஒரு அடையாளமாக காட்டி விடுவோம். போலீஸ்காரர், போலீஸ்காரர் மகள், போலீஸ்காரர் பொண்டாட்டி என்று. அந்த அளவிற்கு நம் சமுதாயத்தில் ஒருவருடைய வேலை என்பது அவர்களின் கௌரவத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒன்றாக திகழ்கிறது. இப்பொழுது பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் எந்த நாள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். வேலை தொடர்பான பிரச்சனையில் இருப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு சூரிய உதயம் ஆகும் பொழுது சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய பகவானுக்கு என்று அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தில் ஏற்றும் திரி ஆரஞ்சு நிற திரியாக இருக்க வேண்டும்.

துணிக்கடையிலிருந்து ஆரஞ்சு நிற காட்டன் துணியை வாங்கி வந்து அதை நன்றாக அலசி காயவைத்து, பன்னீரில் நனைத்து மறுபடியும் நிழலில் உலர்த்தி, பிறகு அதை திரியாக பயன்படுத்த வேண்டும். சூரிய உதயம் ஆன பிறகு சூரிய பகவானுக்கு அகலில் இந்த ஆரஞ்சு நிறத்தில் திரியை போட்டு தீபமேற்றி காட்ட வேண்டும். பிறகு இந்த தீபத்தை கையில் வைத்துக்கொண்டே 27 முறை “ஓம் சூரிய பகவானே நமஹ” என்று உச்சரிக்க வேண்டும். பிறகு இந்த தீபத்தை ஒரு ஓரமாக சூரிய பகவானை பார்த்தவாறு வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக விதைகள் அதிகமாக இருக்கக்கூடிய வர மிளகாய் ஒன்றை எடுத்து சூரிய பகவானுக்கு அர்ப்பணிப்பது போல் அதை இரண்டாக பிரித்து தரையில் போட வேண்டும். அடுத்ததாக பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான நீரை பிடித்து வைத்து அந்த நீரையும் சூரிய பகவானுக்கு ஆவாகனம் செய்வது போல் மூன்று முறை விட வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் பொழுது சூரிய பகவானை பார்த்தவாறு தான் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொண்டு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிக்கும் நாளன்று எந்த நேரத்தில் சூரிய வழிபாடு செய்கிறோமோ, அதே நேரத்தில் தான் மற்ற நாட்களிலும் வழிபாடு செய்ய வேண்டும். எந்த இடத்தில் செய்கிறோமோ, அதே இடத்தில் தான் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். 27 நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டாலும் தொடர்ந்து 27 நாட்கள் செய்து முடித்து விட வேண்டும். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறாமல் இருந்தால் 45 நாட்கள் வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரே மனம் குளிர்ந்து வீடு தேடி வந்த அமர்ந்து செல்வ மழை பொழிய இந்த தீபத்தை ஏற்றுங்கள். சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீப வழிபாடு.

மனதார சூரிய பகவானை நினைத்து வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று தொடர்ந்து வழிபாடு செய்துவர உங்களுடைய வேண்டுதலை சூரிய பகவான் நிறைவேறும்.

- Advertisement -