எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், பண வசியத்தை ஏற்படுத்தவும் இந்த ஒரு பொருளை நம் வீட்டு பூஜை அறையில் வைத்தாலே போதும்….

pooja room
- Advertisement -

நமது வாழ்க்கையில் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் நம்மை சுற்றி இருக்கக் கூடிய அதிர்வலைகளே காரணமாக விளங்குகின்றது. ஒருவரை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருப்பின் அவருக்கு நன்மையே நடக்கும். அதே அதற்கு நேர் மாறாக கெட்ட அதிர்வலைகள் இருந்தால் நமக்கு தீமையே ஏற்படும். நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி இருக்கும் தீய அதிர்வலைகளும் விலக வேண்டும். அந்த தீய அதிர்வல்களை விலக்குவதற்கும், பணவசியத்தை ஏற்படுத்தவும் எந்த பொருளை நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிள்ளையார் கண் என்று கூறப்படும் குன்றின்மணி தான் அந்த பொருள். விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வாங்கும் மண் பிள்ளையாருக்கு கண்ணாக சிவப்பு மற்றும் கருப்பு கலந்த குன்றின்மணியை வைத்திருப்பார்கள். இந்த குன்றின்மணி பல நிறங்களில் இருக்கிறது. கருப்பு, வெள்ளை, பச்சை, கருப்பு மற்றும் சிவப்பு கலந்தது, சிவப்பு நிறம் என்று பல நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு நிற குன்றின் மணிக்கும் ஒவ்வொரு ஆற்றல் இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது கருப்பு நிற குன்றின் மணியின் பலன்கள்.

- Advertisement -

இந்த கருப்பு நிற குன்றின்மணி நாம் எந்த பொருளோடு சேர்த்து வைக்கிறோமோ அந்த பொருளுக்கு ஏற்றவாறு நமக்கு பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த கருப்பு நிற குன்றின்மணி சிவலிங்கத்திற்கு இணையாக கருதப்படுகிறது. இதை வைத்து நாம் இரண்டு பரிகாரங்களை பார்க்க போகிறோம். இந்த கருப்பு நிற குன்றின்மணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து பன்னீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். செய்வதற்கு முன்பாக சுத்தமாக குளித்து முடித்துவிட்டு செய்ய வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை விடியற்காலையில் செய்வது மிகவும் நல்ல பலனை தரும்.

எதிர்மறை ஆற்றல்கள் விலக:
எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு சில பொருட்களை நாம் பயன்படுத்துவோம். அவற்றில் மிகவும் முக்கியமாக நாம் பயன்படுத்துவது கல் உப்பு. இந்த கல் உப்பிற்கு எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு உதவுகிறது. அப்படிப்பட்ட இந்த கல்லுப்பை நாம் ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் சிறிதளவு போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மேல் 1, 3, 9 என்ற எண்ணிக்கையில் கருப்பு நிற குன்றின்மணியை போட வேண்டும். அத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். இதை நம் வீட்டில் வரவேற்பறை அல்லது பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் ஈர்க்கப்பட்டு வீட்டில் நல்ல சக்திகள் மட்டுமே நிலவும்.

- Advertisement -

பண வசியம் ஏற்பட:
எவ்வளவு சம்பாதித்தாலும் பண வசியம் என்ற ஒன்று இருந்தால்தான் நம்மிடம் பணம் தங்கும். இல்லையே ஏதாவது ஒரு ரூபத்தில் அவை செலவாகிவிடும். அந்த பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது டப்பாவிலோ தாழம்பூ குங்குமத்தை போட வேண்டும். அதனுடன் கருப்பு நிற குன்றின் மணியையும், பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். இதை நாம் நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம், பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது நம்முடைய பர்ஸில் கூட இதை பேப்பரில் மடித்து வைக்கலாம். அவ்வாறு பேப்பரில் மடித்து வைக்கும் பொழுது சிறு துளைகளை போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற 5 வாரம் இதை தொடர்ந்து செய்தால் உங்கள் பிள்ளைகள் தான் படிப்பில் முதலிடத்தில் இருப்பார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு பண வசியம் ஏற்படும். பணம் நம் வீட்டில் நிலைத்து நிற்கும். நன்மைகள் பல பெருக இந்த எளிய பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -