குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற 5 வாரம் இதை தொடர்ந்து செய்தால் உங்கள் பிள்ளைகள் தான் படிப்பில் முதலிடத்தில் இருப்பார்கள்.

vinayagar payaru child
- Advertisement -

பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை அது குழந்தைகளின் கல்வியை குறித்ததாக தான் இருக்கும். இன்றைய கல்வி தான் அவர்களின் நாளைய வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றும். அந்த கல்வியை அவர்களுக்கு சரியான முறை தர பெற்றோர்கள் பெரிதளவு பாடு படுகிறார்கள். பெற்றோர்களின் இந்த கவலை நீங்க குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுடைய மனம் ஒரு நிலை பட்டு படிப்பது மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குழைந்தைகளுக்கு கல்வி பரிபூரணமாக கிடைக்க புதன் கிரகத்தின் அனுகிரகம் மிகவும் முக்கியம். அந்த கிரகத்தின் அனுகிரகம் முழுவதுமாக பெற அவருக்கு பிடித்த நிறமான பச்சை நிறத்தை அதிக அளவில் பயன்படுத்துவது பெரிய அளவில் நன்மையை தரும். இப்போதும் இந்த பதிவில் பச்சை நிறத்திலான பச்சை பயிரை வைத்து தான் இந்த பரிகாரத்தையும் செய்ய போகிறோம்.

- Advertisement -

படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெற
இந்த பரிகாரத்தை யார் படிக்கிறார்களோ அவர்கள் தான் செய்ய வேண்டும். இதை குழந்தைகளும் செய்யலாம் அல்லது அரசாங்கத் தேர்வு எழுதுபவர்கள் பொதுவாக வேலைக்கான தேர்வு எழுதுபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சிறிதளவு பச்சை பயிரை எடுத்து பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும்.

அதன் பிறகு தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து முதலில் தீபம் ஏற்றி வணங்கிய பிறகு படிக்க தொடங்க வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து வாரங்கள் செய்ய வேண்டும். ஐந்து வாரங்களிலும் புதன்கிழமையில் பழைய பயிறு மூட்டையை எடுத்து போட்டு விட்டு புதிய பயிர் முட்டையை கட்டி வைத்து வணங்க வேண்டும் இந்த வேண்டுதலை படிக்கும் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும். பெற்றோர்கள் செய்யக் கூடாது.

- Advertisement -

அதே போல் குழந்தைகள் படிக்கும் அறையில் பச்சை நிறம் இருப்பது அவசியம். அதற்கு ஏதாவது சிறிய வகை செடிகளை அந்த அறையில் வைத்து வளர்க்கலாம். அது மட்டும் இன்றி குழந்தைகள் படிக்கும் அறையில் சரஸ்வதி தாயாரின் படத்தை வைத்து தினமும் படிக்க தொடங்கும் அவர்களை வணங்கி விட்டு காயத்ரி மந்திரத்தை சொல்லிய பிறகு படிக்க வேண்டும்.

இன்றைய பல பிள்ளைகளின் நிலையே நன்றாக படிப்பார்கள் ஆனால் படித்தது மனதில் நிற்காது. சில பிள்ளைகளுக்கு படிப்பதற்கான ஆர்வமே இருக்காது. இந்த இரண்டும் இந்த பரிகாரத்தில் மூலம் சரி செய்து விடலாம். படிப்பிற்கான புத்தி கூர்மை ஞானத்தையும் கொடுக்கும் புதன் கிரகத்தையும், படிப்பிற்கான ஆற்றல் தரும் கடவுள்களான விநாயகர் சரஸ்வதி தாயாரை வணங்குவதன் மூலமும் உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு விளக்கை சனி பகவானுக்கு ஏற்றினால் போதும். சனிபகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் வரவே வராது. ஏழரை சனியாகவே இருந்தாலும் அது உங்களுக்கு நன்மையை செய்யும்.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்று எவ்வளவு பாடுபடும் நாம் இந்த சின்ன சின்ன எளிய பரிகாரங்களை குழந்தைகளுக்கு சொல்லி செய்ய சொல்வதனால் அவர்கள் மனம் தெளிவடைந்து புத்தி கூர்மையாகி படிப்பவை அனைத்தும் மனதில் பதிந்து நல்ல முறையில் தேர்வு எழுதி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். இந்த எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து படிப்பை நல்ல முறையில் தொடரலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்

- Advertisement -