எதிர்பாராத பண வரவை ஏற்படுத்தும் பரிகாரம்

six coins
- Advertisement -

இந்த உலகத்தில் வாழ தகுதியுடையவர்கள் என்று பார்த்தால் பணம் இருக்கும் நபர்களை தான் கூற வேண்டும். பணம் இருந்தால் இந்த உலகில் மட்டுமல்லாமல் வேற்று கிரகத்திற்கு கூட செல்ல முடியும் என்பதுதான் நடப்பு ரீதியாக நாம் காண்கின்ற உண்மை. பணத்திற்காக பல வழிகளில் போராடினாலும் அதில் ஜெயிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பணவரவு ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எதிர்பாராத பணவரவை ஏற்படுத்த செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி நான் பார்க்கப் போகிறோம்.

பணத்தை ஒருவர் தேவையில்லாமல் செலவு செய்யும் பொழுது பணம் என்ன மரத்தில் காய்க்கிறதா? என்று கேட்பார்கள். அந்த பண மரத்தை வீட்டில் வளரச் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நாம் பணம் வளரும் செடியை நட வேண்டும் அல்லவா? அந்த வகையில் தான் இன்று நாம் ஒரு தாந்திரீக பரிகாரத்தை செய்யப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணி அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணி இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஒரே அளவிலான 6 நாணயங்கள் வேண்டும்.

அதாவது ஒரு ரூபாய் என்றால் ஆறு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்றால் ஆறு இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்றால் ஆறு ஐந்து ரூபாய் இதை எடுத்துக் கொண்டு வீட்டின் வடகிழக்கு மூலைக்கு செல்ல வேண்டும். அந்த மூலையில் மண் இருக்க வேண்டும். மண் இல்லாத பட்சத்தில் ஒரு தொட்டியில் மண்ணை போட்டு வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த ஆறு நாணயங்களையும் இடது கையில் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு “ஓம் ஸ்ரீ ஓம்” என்னும் மந்திரத்தை மனதிற்குள் 60 முறை கூற வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த நாணயங்களை அந்த மண்ணிற்குள் புதைத்து விட வேண்டும். அடுத்ததாக சுத்தமான தண்ணீரை ஒரு செம்பில் எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளையும் ஒரு ஸ்பூன் அளவில் காய்ச்சாத பாலையும் கலந்து அந்த மண்ணில் ஊற்ற வேண்டும். இவ்வாறு தினமும் 60 முறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு மேலே சொன்னது போல் தண்ணீர், மஞ்சள், பால் மூன்றையும் கலந்து ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணவரவு என்பது ஏற்படும். அதோடு அந்த பண வரவைக் கொண்டு பல மடங்கு படங்களை சம்பாதிக்கும் வாய்ப்பு நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: வாசம் நிறைந்த விளக்கு பொடி தயார் செய்வது எப்படி?

இந்த தொட்டியில் செடி வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை ஏற்கனவே செடிகள் இருந்திருந்தால் அதில் கூட இதை நாம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -