எதிர்பாராத பணவரவு ஏற்பட பரிகாரம்

lakshmi money
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் பல முயற்சிகளை செய்கிறோம். அந்த முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெற்றால் கண்டிப்பான முறையில் அதன் மூலம் நமக்கு பணவரவு என்பது ஏற்படும். அப்படிப்பட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டும் அதன் மூலம் நமக்கு பணவரவு ஏற்படாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தடைப்பட்டு இருக்கிறது என்று நினைப்பவர்களும் சரி அல்லது தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பணக்கஷ்டத்தால் கஷ்டப்படுபவர்களும் சரி சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு பணவரவு ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பணவரவை ஏற்படுத்தக் கூடிய கடவுளாக நாம் மகாலட்சுமி தாயாரை தான் நினைக்கிறோம். மகாலட்சுமி தாயாரை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பண வரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் அடித்தார் போல் பணவரவு ஏற்பட்டுவிட்டது என்று பலரும் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான கிரகமாக திகழ்ந்தவர் தான் சுக்கிர பகவான்.

- Advertisement -

சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக இருக்கும் பட்சத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்கும் பணவரவு எதிர்பாராத ரூபத்தில் அவர்களை வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளை பெறக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை இவர்கள் இருவருக்கும் உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு வெள்ளை துணி தேவைப்படும். இந்த வெள்ளை துணியை முதல் நாளே சுத்தமான பன்னீரில் நன்றாக நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஹோரையில் இந்த வெள்ளை துணியை எடுத்து வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் ஆறு டைமண்ட் கற்கண்டு, ஆறு வெள்ளை மூச்சை இவற்றை வைத்து மூட்டையாக கட்டி அதை நம் வீட்டின் ஈசானிய மூலையில் கட்டி விட வேண்டும். ஒரு வாரம் கழித்து அதாவது அடுத்த வியாழக்கிழமை இந்த மூட்டையை எடுத்து வில்வ மரத்தடியில் போட்டு விட வேண்டும். மறுபடியும் வெள்ளிக்கிழமை அன்று இதே போல் வெள்ளை நிற துணியில் மூட்டையை கட்டி ஈசானிய மூலையில் கட்டி விட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் நாம் தொடர்ந்து செய்து வர நாம் எதிர்பாராத ரூபத்தில் அதிர்ஷ்டகரமாக நமக்கு பணவரவு என்பது ஏற்படும். என்னதான் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்தாலும் நம்முடைய முயற்சியின் பலனால் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டமே நம்முடன் நிலையாக இருக்கும் என்பதால் நம்முடைய முயற்சியையும் நாம் விடாமல் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பணவரவை தரக்கூடிய பரிகாரத்தை நாமும் செய்து நம்முடைய வாழ்வில் நிரந்தர பணவரவை ஏற்படுத்திக் கொள்வோம்.

- Advertisement -