தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

cash
- Advertisement -

சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம் பிடித்தது போல ஒரு நிலைமை. இதிலிருந்து நான் வெளிவர, நம்மை நாமே சரி செய்து கொள்ளவும், நம்மை பிடித்த தரித்திரத்தை விளக்கவும், பணக்கஷ்டத்திலிருந்து வெளிவரவும், தாந்திரீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

உங்களை நீங்களே கிளன்சிங் செய்ய போறீங்க. உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றலை நெகட்டிவ் எனர்ஜியை நீங்களே வெளியேற்ற போறீங்க அதற்கான பரிகாரம்தான் இது. நெகட்டிவ் வெளியே போயிட்டா பாசிட்டிவ் தானா உங்ககிட்ட வந்துடும். பணமும் தானா உங்களை தேடி வர தொடங்கிவிடும்.

- Advertisement -

பணம் தரும் விசித்திர பரிகாரம்

இதற்கு கருப்பு நிற காட்டன் நூல் நமக்கு தேவை. நூல் விற்பனை செய்யும் கடைகளில் சென்று, காட்டன் நூல் கேட்டால் உங்களுக்கு கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. உங்களை நீங்களே இந்த கருப்பு நூலை கொண்டு அளக்க வேண்டும். உங்களுடைய உயரத்திற்கு கருப்பு நூல் தேவை. உங்க உயரத்தில் இருக்கும் 5 மடங்கு கருப்பு நூல் எடுத்துக்கோங்க.

நூலை தனித்தனியாக வெட்ட வேண்டாம். இப்படி அளவு எடுத்த கருப்பு நூலை உங்கள் கையாலேயே சுருட்டிக் கொள்ளுங்கள். இந்த கருப்பு நூலை உங்களுடைய தலையை 9 முறை சுற்றி நெருப்பில் போட வேண்டும். ஒரு சின்ன மண் அகல் விளக்கில் கற்பூரத்தை கொளுத்தி, அந்த நெருப்பில் இந்த கருப்பு நூலை எரித்து பொசுக்கி விட்டால் உங்களை பிடித்த தரித்திரம் உங்களை விட்டு நீங்கிவிடும்.

- Advertisement -

நூலை எரித்துவிட்டு முகம் கை கால்களை கழுவி கொள்ளுங்கள். எரிந்த சாம்பலை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மேலாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதை செய்தால் உங்களை பிடித்த நெகட்டிவ் எனர்ஜி நீங்கி, பண வரவுக்கு தடையாக இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விலகும்.

வெறும் கருப்பு நூலுக்கு பின்னாடி இத்தனை அதிசயம் நடக்குதா. ஆமாங்க, ஆச்சரியம் உண்டு பண்ணும் அளவுக்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் நூலை வைத்து, உங்களை அளந்து எடுப்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை உங்கள் தலையில் இருந்து, உள்ளங்கால் வரை முதலில் நூலை அளந்துக்கோங்க.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளை அழைக்கும் பூஜை

அதே நூலை அளவாக வைத்து இன்னும் நான்கு மடங்கு நூலை எடுத்தால், மொத்தமாக 5 மடங்கு நூல் உங்களுக்கு கிடைச்சிடும். சுத்தமான காட்டன் நூலில் இந்த பரிகாரத்தை செய்யும் போது நிச்சயம் முழு பலனை எதிர்பார்க்க முடியும். மன கஷ்டத்தில் இருப்பவர்கள், பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -