வெறும் ஐந்தே நிமிடத்தில் அழகான அடர்த்தியான புருவத்தை இயற்கையாக பெற, வைரலாகும் ஐப்ரோ ட்ரிக்.

eyebrow
- Advertisement -

அழகான அடர்த்தியான புருவம் ஒருவருக்கு முக அழகை அதிகப்படுத்தி காட்டும். நிறைய பேருக்கு அடர்த்தியாக புருவம் இருக்காது. அதை அடர்த்தியாக மாற்றிக்கொள்ள கருப்பு வண்ணத்தில் ஐப்ரோ பென்சில் பயன்படுத்துவார்கள். அதுவும் அழகை தரக்கூடிய ஒரு விஷயம் தான். இருப்பினும் இயற்கையாகவே உங்களுடைய புருவம் அடர்த்தியாக இருப்பது போல ஒரு தோற்றத்தைப் பெற, இயற்கையான முறையில் ஒரு ஐடியாவை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அடர்த்தியான புருவத்திற்கு மட்டும் ஒரு குறிப்பு அல்ல. அழகான நக வளர்ச்சிக்கு, அழகான முடி வளர்ச்சிக்கு என்று சொல்லி மொத்தமாக மூன்று முத்தான குறிப்புகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

குறிப்பு 1:
இயற்கையான அடர்த்தியான புருவத்தை பெறுவதற்கு ஒரே ஒரு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மெழுகுவத்தி அல்லது விளக்கை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அந்த கிராம்பின் மேல் பக்கத்தை அதாவது, பூப்போல இருக்கும் அல்லவா அந்த பக்கத்தை அந்த நெருப்பில் ஒரு இரண்டு செகண்ட் சுட்டுக் கொள்ளுங்கள். நெருப்பில் அந்த கிராம்பு மொட்டு கருகிவிடும். அதை எடுத்து உங்களுடைய கை மேல் தேய்த்து பார்த்தால் கருப்பு நிற கறி போல ஒட்டும்.

இந்த கிராம்பை அப்படியே உங்களுடைய புருவத்தின் மேல் வைத்து ஐப்ரோ வடிவத்திற்கு மேலே தீட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு அடர்த்தியாக வேண்டுமோ, அந்த அளவிற்கு புருவத்தில் இதை மை போலவே தீட்டிக் கொள்ளலாம். பிறகு பாருங்கள் உங்களுடைய புருவம் இயற்கையாகவே முடி அடர்த்தியாக வளர்ந்தது போல அவ்வளவு அழகாக தெரியும். இப்போது நிறைய பேர் இந்த ஐடியாவை வைரலாக நிறைய வீடியோ பதிவுகளில் பார்த்திருக்கலாம். உங்களுக்கு பிடிச்சிருந்தா இதை ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

குறிப்பு 2:
நிறைய பேருக்கு அழகான நகம், உடையாமல் வளரக்க ஆசை இருக்கும். அழகான நெயில் பாலிஷ் வைக்கத்தான். ஒரு சிறிய பவுலில் நகம் மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் தண்ணீர், 1/2 ஸ்பூன் ஷாம்பு போட்டு கலந்து உங்களுடைய நகத்தை அதில் பத்து நிமிடங்கள் ஊற வையுங்கள். அதன் பின்பு ஒரு பூண்டு பல்லை எடுத்து தோலுரித்து இரண்டாக வெட்டி அந்த பூண்டு புல்லை நகத்தின் மேலே லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். நகம் சீக்கிரம் அழகாக உடையாமல் வளரும்.

இதையும் படிக்கலாமே: இந்த வேசலினை இதுக்கெல்லாம் கூடவா யூஸ் பண்ணுவாங்க? நம்பவே முடியலையே! இத படிச்ச பிறகு உங்களுக்கும் கூட இப்படித் தாங்க தோணும்?.

குறிப்பு 3:
அழகான அடர்த்தியான அதிவேக முடி வளர்ச்சிக்கு ஒரு சிறிய பவுலில் 20ml ஆலிவ் ஆயில் போட்டு அதில் 20 கிராம்புகளை நுணுக்கி நசுக்கி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுவதும் ஆலிவ் ஆயிலில் கிராம்பு ஊறட்டும். மறுநாள் காலை இந்த எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் இந்த எண்ணெயை ஸ்கேல்பில் படும்படி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைத்தும் தலைக்கு குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் அடர்தியான முடியை பெறலாம்.

- Advertisement -