இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தேங்காய் பரிகாரம்.

cocount-Cash in hand
- Advertisement -

ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் பலவிதமான இழப்புகளை சந்தித்து இருப்பார்கள். இதில் ஒரு சில இழப்புகளை நம்மால் ஈடு செய்ய முடியாது அது விதியின் வசம். ஆனால் காலம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமோ, நகையோ அல்லது நமக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய நிலம், சொத்து போன்றவை பிறரின் சூழ்ச்சியால் நம்மை விட்டு செல்லும் போது அதனுடைய வேதனையை சொல்லவே முடியாது.

இப்படியான துன்பத்தை இன்று பலரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நம்பி கொடுத்த பணம், நகை போன்றவற்றை ஏமாற்றுவது. நமக்கு உரிமை உள்ள சொத்துக்கள் நம்மை வராமல் தடுப்பது போன்றவற்றை செய்பவர்களிடமிருந்து தானாக அதையெல்லாம் திரும்பப் பெற இந்த ஒரு எளிய பரிகாரம் துணை புரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கொடுத்த பணம் நகை திரும்ப பெற

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் சனிக்கிழமை நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்பொழுது செய்ய நேரம் இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு முதலில் நல்ல நிலையில் உள்ள ஒரு தேங்காயை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

முதலில் இந்த தேங்காயை இரண்டு சமப்பாகமாக உடைத்து தேங்காயின் குடிமையை எடுத்து விடுங்கள். அதன் பிறகு தேன் கோதுமை மாவு, சர்க்கரை, வெள்ளை எள் இதை மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து தேங்காயின் இரண்டு முடியிலும் போட வேண்டும். இதை எல்லாம் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்தே செய்யலாம்.

- Advertisement -

இப்படி செய்த பிறகு இந்த இரண்டு அரை மூடி தேங்காயும் இரண்டு கையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் என யாரேனும் ஒருவரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் யாரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தீர்களோ அல்லது நகையை கொடுத்து ஏமாந்தீர்களோ அவர்களின் பெயரை சொல்லி அது தங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அதே போல் உங்களுக்கு வர வேண்டிய நியாயமான சொத்து உங்களுக்கு வராமல் இருக்கவும் யாரேனும் ஒரு நபர் தான் காரணமாக இருப்பார்கள். அவரின் பெயரை சொல்லி உங்களுடைய சொத்து உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி உங்களை யாராவது துன்புறுத்தினால் அந்த எதிரிகளையும் பெயரை சொல்லிக் கூட சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி வேண்டிய பிறகு இந்த தேங்காயை யாரும் கால் படாத இடத்தில் மண்ணை தோண்டி புதைத்து விட வேண்டும். அப்படி ஒரு இடம் இல்லை என்றால் அரச மரத்தடியில் இதை தோண்டி புதைக்க வேண்டும். ஆக மொத்தம் இந்த தேங்காயை புதைத்து மண்ணை போட்டு மூட வேண்டும் இது மிகவும் முக்கியம்.

இந்த தேங்காயையும் இதனுடன் இருக்கும் பொருட்களையும் மண்ணுள் வாழும் சிறு ஜீவராசிகள் உண்ணும் பொழுது உங்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் தீரும். இதன் மூலம் உங்களை ஏமாற்றும் நோக்க முடியவர்கள் மனநிலை கூட மாறி, தானாகவே அவர்கள் உங்களிடம் வாங்கிய பொருள் பணம் நகை சொத்து அனைத்தையும் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக சிவபெருமானுக்கு இந்த நாளில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஏழு வாரங்கள் வரை செய்ய வேண்டும். இந்த ஏழு வாரங்கள் முடிவதற்குள்ளாகவே உங்களுக்கு மாற்றங்கள் தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து நல்ல பலனை அடையலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -